தேனி: கலவரம் நடந்து இரு வாரங்கள் கடந்த நிலையில், ஏதோ நெருக்குதலால் தங்கள் பகுதியைக் காண வருவதாகக் கூறி, விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளவனை ஊருக்குள் விட மறுத்தனர் பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த 24ஆம் தேதி இஸ்லாமியர்கள், உள்ளூரில் ஏற்பட்ட தராறில் வெளி ஊர்களில் இருந்து அடியாட்களை அழைத்து வந்து, தலித் சமூகத்தைச் சேர்ந்த வீடுகள், கடைகள், வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தி அடித்து நொறுக்கி கலவரம் செய்தனர். இதனால் அந்த இரு பிரிவினருக்கும் இடையே மோதல் மூண்டது.
ஊருக்குள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, போலீஸார் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் பொம்மிநாயக்கன் பட்டி பகுதிக்குச் சென்றார்.
கலவரம் நடந்து 15 நாள்களுக்குப் பின்னர் இப்போது வருவது ஏன் என கேள்வி எழுப்பிய அவ்வூர் மக்கள், அவரை சந்திக்க மறுத்து விட்டனர். மேலும், அங்குள்ள கட்சி நிர்வாகிகள் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர்களது சமாதானங்களை ஏற்க மறுத்து விட்டனர்.
இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த தொல் திருமாவளவன், அங்குள்ள உள்ளூர் கட்சிக்காரர்களை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பினார்.
அதன் பின்னர், கலவரத்தில் காயப்பட்ட தலித் மக்களுக்கு ஆறுதல் கூற இயலாமல், கலவரத்திற்கு காரணமாக இருந்த இஸ்லாமியர்களை கட்டி அணைத்து, இரு தரப்பும் சமரச நல்லிணக்கம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.



