ஒருவர் கொலை வெறியுடன் தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்: எடப்பாடியின் டிவிட்டுக்கு சர்ச்சை அர்ச்சனைகள்!

edappaditweet - 2026

ஒருவர் உங்களைத் தாக்க வரும்போது, நீங்கள் இயல்பாகவே உங்களைக் காத்துக் கொள்ள விழைவீர்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் எவருமே முன்கூட்டியே திட்டமிட்ட ரீதியில் செயல்படமாட்டார்கள்… என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இப்படி ஒரு டிவிட்டர் பதிவை அவர் ஆங்கிலத்தில் போட்டாலும் போட்டார்… அந்த டிவிட்டின் பின்னணியில் மிக மோசமான வார்த்தைகளால் கொன்று எடுக்கிறார்கள் பின்னூட்டம் போடுபவர்கள். வசைச் சொற்களால் அட்மினுக்கு காய்த்து எடுக்கும் சிலர், அட்மின் மூலம் ஆங்கிலத்தில் பதிவு செய்தால் அப்படியே விட்டுவிடுவோமா என்று கேள்வி கேட்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதும், அப்போது போலீஸார் போராட்டக்காரர்களைப் பார்த்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதும் தூத்துக்குடி நகரை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

கலவரக் காரர்கள் வரம்பு மீறி போலீஸார் மீது கல்லெறிந்து, கொலை செய்யும் நோக்கோடு திட்டமிட்டு தாக்கினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஆகியவற்றில் இருந்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் தீங்கிழைத்த முயன்றனர் என்பதால்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஒரு தரப்பு கூறுகிறது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

போலீஸார் வரம்பு மீறி, குறிபார்த்து சுட்டனர் என்றும் சக மக்களை மக்களாகப் பார்க்காமல் குருவியைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளினர் என்றும் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் தூத்துக்குடி மக்களில் பலர்.

இந்த நிலையில்,போலீஸாரின் நிலைப்பாட்டை விளக்குவது போல், முதல்வர் பழனிச்சாமியின் இந்த டிவிட் பார்க்கப் படுகிறது.

ஸ்டெர்லைட் பிரச்னை சில அரசியல் கட்சிகளாலும், தலைவர்களாலும் தவறாக வழிநடத்தப் படுகிறது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்தே மாநில அரசு செயல்படுகிறது என்றும், எதிர்க்கட்சியினர் அப்பாவி மக்களை போராடத் தூண்டிவிட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், போராட்டக் காரர்களுடன் 14 முறை பேச்சு வார்த்தை நடத்தி அரசின் நிலையை எடுத்துக் கூறியுள்ளது என்றும், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்க்கான உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளதாக எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

மே 22 ஆம் தேதி சமூக விரோதிகள் இந்தப் போராட்டக் குழுவில் ஊடுருவி, போலீஸாரை தாக்கி, வண்டிகளை தீவைத்துக் கொளுத்தி, வன்முறையில் ஈடுபட்டனர் என்றும், போலீஸார் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்றும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

சட்ட ரீதியாக ஸ்டெர்லைட்டை மூடும் முயற்சியை மாநில அரசு மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories