ஒருவர் கொலை வெறியுடன் தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்: எடப்பாடியின் டிவிட்டுக்கு சர்ச்சை அர்ச்சனைகள்!

edappaditweet - 2026

ஒருவர் உங்களைத் தாக்க வரும்போது, நீங்கள் இயல்பாகவே உங்களைக் காத்துக் கொள்ள விழைவீர்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் எவருமே முன்கூட்டியே திட்டமிட்ட ரீதியில் செயல்படமாட்டார்கள்… என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இப்படி ஒரு டிவிட்டர் பதிவை அவர் ஆங்கிலத்தில் போட்டாலும் போட்டார்… அந்த டிவிட்டின் பின்னணியில் மிக மோசமான வார்த்தைகளால் கொன்று எடுக்கிறார்கள் பின்னூட்டம் போடுபவர்கள். வசைச் சொற்களால் அட்மினுக்கு காய்த்து எடுக்கும் சிலர், அட்மின் மூலம் ஆங்கிலத்தில் பதிவு செய்தால் அப்படியே விட்டுவிடுவோமா என்று கேள்வி கேட்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதும், அப்போது போலீஸார் போராட்டக்காரர்களைப் பார்த்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதும் தூத்துக்குடி நகரை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

கலவரக் காரர்கள் வரம்பு மீறி போலீஸார் மீது கல்லெறிந்து, கொலை செய்யும் நோக்கோடு திட்டமிட்டு தாக்கினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஆகியவற்றில் இருந்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் தீங்கிழைத்த முயன்றனர் என்பதால்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஒரு தரப்பு கூறுகிறது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

போலீஸார் வரம்பு மீறி, குறிபார்த்து சுட்டனர் என்றும் சக மக்களை மக்களாகப் பார்க்காமல் குருவியைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளினர் என்றும் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் தூத்துக்குடி மக்களில் பலர்.

இந்த நிலையில்,போலீஸாரின் நிலைப்பாட்டை விளக்குவது போல், முதல்வர் பழனிச்சாமியின் இந்த டிவிட் பார்க்கப் படுகிறது.

ஸ்டெர்லைட் பிரச்னை சில அரசியல் கட்சிகளாலும், தலைவர்களாலும் தவறாக வழிநடத்தப் படுகிறது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்தே மாநில அரசு செயல்படுகிறது என்றும், எதிர்க்கட்சியினர் அப்பாவி மக்களை போராடத் தூண்டிவிட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், போராட்டக் காரர்களுடன் 14 முறை பேச்சு வார்த்தை நடத்தி அரசின் நிலையை எடுத்துக் கூறியுள்ளது என்றும், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்க்கான உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளதாக எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

மே 22 ஆம் தேதி சமூக விரோதிகள் இந்தப் போராட்டக் குழுவில் ஊடுருவி, போலீஸாரை தாக்கி, வண்டிகளை தீவைத்துக் கொளுத்தி, வன்முறையில் ஈடுபட்டனர் என்றும், போலீஸார் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்றும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

சட்ட ரீதியாக ஸ்டெர்லைட்டை மூடும் முயற்சியை மாநில அரசு மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories