புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

stalin darna - 2026

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தின. அப்போது, ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறையாளர்கள் உள் கலந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்சில் இருந்து துவங்கிய ஊர்வலம் கடந்த செவ்வாய்க் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தீயிட்டுக்  கொளுத்தி, ஸ்டெர்லைட் குடியிருப்யில் வாகங்களைத் தீக்கிரையாகி, வீடுகளுக்கு தீவைத்து, போலீஸாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லெறிந்து வன்முறை தலைவிரீத்தாடியது. இதனால், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிழக அரசின் இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து, சென்னையில் மறியல் போராட்டம் நடத்தின.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் மதுராந்தகம் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக.,வைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக மணக்கோலத்தில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஸ்டாலினும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட  ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.

3 COMMENTS

  1. இந்த குடும்பம் வாய் வைக்காத இடமே இல்லை எனலாம். தம்பதிகளுக்கு எவ்வளவு கொடுத்து அழைத்து வந்தாரோ ….அல்லது இதுவும் செட் அப் தானோ…….தமிழகத்தில் எரிந்து கொண்டு இருக்கும் பிரச்னைகள் ஆயிரம் இருக்க. டெபாசிட் இழந்த கட்சிக்கு வேறு பிழைப்பே இல்லையா………கோடி கோடி கோடி கோடி அடித்த கொள்ளையுடன் எங்கேயாவது வெளி நாட்டுக்கு பொய்த்தோலைவதுதானே……………..பாவமன்னிப்புகளுக்கு ஏஜெண்டாக இருந்து இன்னும் சம்பாதிக்க வேண்டுமா. ……தமிழர்களை இனியாவது நிம்மதியாக வாழ விடலாமே…….இந்த கழகங்கள் எதுவுமே வேண்டாம். தமிழகம் தானாக தலை நிமிரும்……எத்தனை எத்தனை பிரச்னைகள்…..தண்ணீர், கல்வி, வழிபாடு, சாலை, பசுமை……எதையுமே எந்த பிரச்னையும் முக்கியமில்லை. எவனோ ஒரு துரோகிக்கு எடுபிடியாக இருந்து வேலை பார்ப்பது ஒரு அரசியலா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories