புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!

stalin darna - 2026

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சென்னையில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தின. அப்போது, ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்த புதுமண தம்பதிகளுடன் போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தின் 100வது நாளில் வன்முறையாளர்கள் உள் கலந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. தூத்துக்குடி பனிமய மாதா சர்ச்சில் இருந்து துவங்கிய ஊர்வலம் கடந்த செவ்வாய்க் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தீயிட்டுக்  கொளுத்தி, ஸ்டெர்லைட் குடியிருப்யில் வாகங்களைத் தீக்கிரையாகி, வீடுகளுக்கு தீவைத்து, போலீஸாரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லெறிந்து வன்முறை தலைவிரீத்தாடியது. இதனால், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிழக அரசின் இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து, சென்னையில் மறியல் போராட்டம் நடத்தின.

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரண்டு கம்யூனிஸ்ட்டுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் மதுராந்தகம் பகுதியில் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக.,வைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு, நேரடியாக மணக்கோலத்தில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஸ்டாலினும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட  ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.

3 COMMENTS

  1. இந்த குடும்பம் வாய் வைக்காத இடமே இல்லை எனலாம். தம்பதிகளுக்கு எவ்வளவு கொடுத்து அழைத்து வந்தாரோ ….அல்லது இதுவும் செட் அப் தானோ…….தமிழகத்தில் எரிந்து கொண்டு இருக்கும் பிரச்னைகள் ஆயிரம் இருக்க. டெபாசிட் இழந்த கட்சிக்கு வேறு பிழைப்பே இல்லையா………கோடி கோடி கோடி கோடி அடித்த கொள்ளையுடன் எங்கேயாவது வெளி நாட்டுக்கு பொய்த்தோலைவதுதானே……………..பாவமன்னிப்புகளுக்கு ஏஜெண்டாக இருந்து இன்னும் சம்பாதிக்க வேண்டுமா. ……தமிழர்களை இனியாவது நிம்மதியாக வாழ விடலாமே…….இந்த கழகங்கள் எதுவுமே வேண்டாம். தமிழகம் தானாக தலை நிமிரும்……எத்தனை எத்தனை பிரச்னைகள்…..தண்ணீர், கல்வி, வழிபாடு, சாலை, பசுமை……எதையுமே எந்த பிரச்னையும் முக்கியமில்லை. எவனோ ஒரு துரோகிக்கு எடுபிடியாக இருந்து வேலை பார்ப்பது ஒரு அரசியலா…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories