சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராக போராட்டம்! அறிவித்தார் சீமான்!

13 May28 Seeman - 2026

சேலம்- சென்னை 8 வழி சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து சேலத்துக்கு 277 கி.மீ., தொலைவுக்கு பசுமை வழி சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதை அடுத்து, இந்தத் திட்டத்துக்கான நிலம் கையகப் படுத்தும் நடவடிக்கைகள் முறையாக அறிவிக்கை வெளியிடப் பட்டு தொடங்கப் பட்டுள்ளன. இந்நிலையில், தங்கள் நிலஙக்ளை இந்தத் திட்டத்துக்காக கையகப் படுத்துவதை விவசாயிகள் சிலர் எதிர்த்து வருகின்றனர். இந்தத் திட்டத்தால் தங்கள் விளை நிலத்துக்கான விலை கிடைக்காது என்ற எண்ணத்தில் போராட்டத்தில் பலர் குதித்துள்ள நிலையில், நேற்று விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனிடையே இன்று காலை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீஸார் மீது கண்மூடித்தனமாக கொலை வெறித்தாக்குதல் நடத்திய வழக்கில் சீமான் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சர்வதேச விமான நிலையங்கள் கூட குறைவான பரப்பளவில் செயல் பட்டுவரும் நிலையில் சென்னை – சேலம் 8 வழி சாலைக்காக 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தேவையற்ற ஒன்று. இதற்காக நாம் தமிழர் சார்பில் போராட்டம் நடத்தப் படும் என்று கூறினார்.

சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி, போராட்டத்தை தூண்டிவிடும் நபர்கள் குறித்து அரசு எச்சரித்து கைது நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது. இந்நிலையில் சீமான் தாம் இந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடப் போவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories