
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமூக விரோத சக்திகள், பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்து வந்தனர். அவர்களைக் கண்டித்தும், அவர்களை போலீஸார் கைது செய்ய வலியுறுத்தியும் கடையநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பாஜக.,வினர் கலந்து கொண்டனர்.



