தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்காக இந்தப் படங்கள்..! நன்றி தமிழகம்!

bjp meeting chennai amitsha - 2026

தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்டவர்களுக்காக இங்கே சில படங்கள் என்றும், நன்றி தமிழகம் என்றும் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் அமித் ஷா ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர், தமிழகத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி வழங்கியது மோடி அரசு, காங்கிரஸ் அரசு குறைந்த நிதியே வழங்கியது என்று பேசினார்.

 

தமிழகத்தில் பாஜக., நிச்சயம் ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் ஒரு மகத்துவமான நாள்தான். நான் தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். பாருங்கள்… 2019 மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் பாஜக., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

தமிழகத்தின் முதுமொழி, வள்ளுவரின் வாய்மொழி. வரும் விருந்தினரை விருந்தோம்பி, அவர்களுக்காகக் காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என்று வள்ளுவர் தம் வாய்மொழியில் சொன்னார். ஆனால் எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வள்ளுவர் வாக்கை நன்கு அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு நான் இரு கரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவிக்கிறேன்… என்றார்.

அண்மையில் பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது, கோ பேக் மோடி என்ற வாசகத்தை இட்டு, டிவிட்டரில் அதனை பிரபலப் படுத்தி, கருப்புக் கொடி காட்டி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் மோடி சென்னைக்கு வந்து, ஆயுதத் தொழிற்சாலை வேலைவாய்ப்பு என தமிழகத்துக்கு நன்மை செய்து விட்டு திரும்பினார். அதுபோல், அமித் ஷாவின் இன்றைய வருகையை முன்னிட்டு, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோ பேக் அமித் ஷா என்ற டிவிட்டர் பதிவிட்டு அதனை டிரெண்டிங் ஆக்கினர். இதனால் சற்றே கடுப்பான அமித் ஷா, இவ்வாறு பேசியிருப்பதாக பாஜக,.வினர் தெரிவித்தனர்.

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

மேலும், இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன்
உலகின் மிகப் பெரிய கட்சியாக பாஜக, உள்ளது. மோடி அரசின் மக்கள் சேவையால் பாஜக., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடியின் பாஜக., அரசு செய்திருக்கிறது.

இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசுகளை விட மோடி அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்ப் பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

முந்தைய ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. ஆனால், ஊழல், சாதீயவாதம், வாரிசு அரசியல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்தது மோடி அரசு. மோடி ஆட்சியில் எதிர்ப்பாளர்களால்கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வர பாஜக., உறுதியேற்கும் என்று பேசினார் அமித் ஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories