தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்காக இந்தப் படங்கள்..! நன்றி தமிழகம்!

bjp meeting chennai amitsha - 2026

தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்டவர்களுக்காக இங்கே சில படங்கள் என்றும், நன்றி தமிழகம் என்றும் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் அமித் ஷா ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர், தமிழகத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி வழங்கியது மோடி அரசு, காங்கிரஸ் அரசு குறைந்த நிதியே வழங்கியது என்று பேசினார்.

 

தமிழகத்தில் பாஜக., நிச்சயம் ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் ஒரு மகத்துவமான நாள்தான். நான் தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். பாருங்கள்… 2019 மார்ச் மாதத்துக்குள் தமிழகத்தில் பாஜக., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழகத்தின் முதுமொழி, வள்ளுவரின் வாய்மொழி. வரும் விருந்தினரை விருந்தோம்பி, அவர்களுக்காகக் காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என்று வள்ளுவர் தம் வாய்மொழியில் சொன்னார். ஆனால் எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வள்ளுவர் வாக்கை நன்கு அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு நான் இரு கரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவிக்கிறேன்… என்றார்.

அண்மையில் பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது, கோ பேக் மோடி என்ற வாசகத்தை இட்டு, டிவிட்டரில் அதனை பிரபலப் படுத்தி, கருப்புக் கொடி காட்டி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் மோடி சென்னைக்கு வந்து, ஆயுதத் தொழிற்சாலை வேலைவாய்ப்பு என தமிழகத்துக்கு நன்மை செய்து விட்டு திரும்பினார். அதுபோல், அமித் ஷாவின் இன்றைய வருகையை முன்னிட்டு, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோ பேக் அமித் ஷா என்ற டிவிட்டர் பதிவிட்டு அதனை டிரெண்டிங் ஆக்கினர். இதனால் சற்றே கடுப்பான அமித் ஷா, இவ்வாறு பேசியிருப்பதாக பாஜக,.வினர் தெரிவித்தனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மேலும், இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன்
உலகின் மிகப் பெரிய கட்சியாக பாஜக, உள்ளது. மோடி அரசின் மக்கள் சேவையால் பாஜக., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடியின் பாஜக., அரசு செய்திருக்கிறது.

இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசுகளை விட மோடி அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்ப் பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில், 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

முந்தைய ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. ஆனால், ஊழல், சாதீயவாதம், வாரிசு அரசியல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்தது மோடி அரசு. மோடி ஆட்சியில் எதிர்ப்பாளர்களால்கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வர பாஜக., உறுதியேற்கும் என்று பேசினார் அமித் ஷா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories