அருவியில் குளிக்க பெண்களுக்கும் வரிசை: அசத்தும் போலீஸார்!

 

courtallam jul14 - 2026

குற்றால பேரருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பெண்கள் வரிசையில் நின்று குளிக்க அனுமதி அளித்து அசத்தும் போலீசார்க்கு பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

குற்றாலத்தில் தற்போது  2 வது கட்டமாக சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். அருவிகள் நகரமாக இருக்கும் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக குற்றாலம், தென்காசி மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சிலு…சிலு ..சூழல் நிலவி வருகிறது. மேலும் சாரல் காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

பேரருவியில் ஆர்ப்பரிப்போடு கொட்டும் நீரில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பேரருவியில் பெண்கள் பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி எந்த ஆண்டுகளும் இல்லாத அளவு இந்தாண்டு காவல்துறையினர் பெண் சுற்றுலாப் பயணிகளை நீண்ட வரிசையில் நின்று குளிப்பதற்கு அனுமதித்து வருகின்றனர்.

இதனால் பெண்கள் அதிகநேரம் கூட்ட நெரிசலின்றி குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தற்போது அதிகளவு காணப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories