December 6, 2025, 2:26 AM
26 C
Chennai

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த சிறுமியை சீரழித்த 8 பேர் கும்பல்!

girl attack image - 2025

ராமநாதபுரம்: மொபைl போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

தமிழகத்திலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பரிதவித்துப் போயுள்ளனர். இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தாலும் குற்றங்கள் தான் குறைந்த பாடில்லை.

இதுபோல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிக வலி உடைய மரண தண்டனை அளித்தால்தான், இது போன்ற குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம், அண்ணா நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். சில வாரம் முன் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்குச் சென்றார். அந்தக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம் 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யச் சொன்னார் சிறுமி. ஆனால் அவர் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தார். பின், அந்த செல்போன் நம்பரை வைத்துக் கொண்டு அடிக்கடி அந்த சிறுமியிடம் பேசினார்.

ஒரு நாள் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின் அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மேலும், தன் நண்பர்களுக்கும் போன் போட்டு, 7 பேரை வரவழைத்து அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து, அதனையும் வீடியோ எடுத்துள்ளார். மற்றவர்களும் மாற்றி மாற்றி வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அதைக் காட்டியே அந்தச் சிறுமியை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அந்த எட்டு பேரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் அந்தச் சிறுமி தனக்கு நடந்தவை குறித்து தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியை சீரழித்தவர்களை போலீசார் தேடினர். செல்போன் கடையில் வேலை செய்த அக்பர் அலி (27) அபுதாகிர் (26) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் மற்ற 6 பேர் குறித்து விசாரித்து, அவர்களையும் தேடி வருகின்றனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் உட்பட நான்கு கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories