செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த சிறுமியை சீரழித்த 8 பேர் கும்பல்!

girl attack image - 2026

ராமநாதபுரம்: மொபைl போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

தமிழகத்திலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பரிதவித்துப் போயுள்ளனர். இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தாலும் குற்றங்கள் தான் குறைந்த பாடில்லை.

இதுபோல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிக வலி உடைய மரண தண்டனை அளித்தால்தான், இது போன்ற குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம், அண்ணா நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். சில வாரம் முன் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்குச் சென்றார். அந்தக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம் 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யச் சொன்னார் சிறுமி. ஆனால் அவர் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தார். பின், அந்த செல்போன் நம்பரை வைத்துக் கொண்டு அடிக்கடி அந்த சிறுமியிடம் பேசினார்.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

ஒரு நாள் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின் அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மேலும், தன் நண்பர்களுக்கும் போன் போட்டு, 7 பேரை வரவழைத்து அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து, அதனையும் வீடியோ எடுத்துள்ளார். மற்றவர்களும் மாற்றி மாற்றி வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அதைக் காட்டியே அந்தச் சிறுமியை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அந்த எட்டு பேரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் அந்தச் சிறுமி தனக்கு நடந்தவை குறித்து தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து சிறுமியை சீரழித்தவர்களை போலீசார் தேடினர். செல்போன் கடையில் வேலை செய்த அக்பர் அலி (27) அபுதாகிர் (26) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் மற்ற 6 பேர் குறித்து விசாரித்து, அவர்களையும் தேடி வருகின்றனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் உட்பட நான்கு கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories