சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க நேற்று முன் தினம் இரவு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்திருந்தார் தா.பாண்டியன். இந்நிலையில் இன்று காலை திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.




