எப்போது வரும் அடுத்த அறிக்கை? நற்செய்தி தருமா? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

Published:

ezunthuvaa thalaiva - 2026சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள்.

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது. மேலும் 24 மணி நேரத்துக்குப் பிறகே அடுத்து எதுவும் கூற முடியும் என்று தெரிவித்ததால், அடுத்த அறிக்கையினை மருத்துவமனை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் மேலோங்கி வருகிறது.

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் இன்று காலை மீண்டும் வந்தார். தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு, கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதி பரபரப்புடனே இருக்கிறது.

இன்று முற்பகல் 11 மணி அளவிலும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதியின் மனதைரியத்தால் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரியிடம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன் என்றும்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img