வசமாய் சிக்கிய வய்ரமுத்து! பாலூத்திய பகுத்தறிவுப் பாசத்துக்கு வெச்சி செய்யும் வலைத்தள வாசிகள்!

Published:

vairamuthu milk karunanithi - 2026

சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று காலை தன் மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு பால் தெளிக்கச் சென்றார். கையில் ஒரு பிளாஸ்டிக் புட்டியை வைத்து, அதில் பால் எடுத்து, கையில் ஊற்றி, கருணாநிதி சமாதியில் சிமிண்ட் பலகையில் ஊற்றிவிட்டு வந்தார்.

இந்தப் புகைப்படம் இன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து பலத்த விவாதங்கள் அவற்றில் எழுந்து வருகின்றன. காரணம், பால் ஊற்றுதல் பகுத்தறிவில் சேருமா என்பதுதான்!

ஒரு மனிதரின் மரணம் எத்தனை நாத்திகவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது; மரணம் சோகமானது மட்டுமல்ல பல சமயங்களில் பகுத்தறிவுவாதிகளின் போலித் தனத்தையும் அல்லவா வெளிச்சம் போட்டு காட்டுகிறது – என்று கருத்து தெரிவிக்கிறார்கள் பலர்.

தமிழ்ப் பால் ஊட்டிய தலைமகற்கு இந்தக் கவிப் பால் ஊற்றியது ஆவின் பால்.. – என்று பாலூற்றும் வைபவத்துக்கு கவிதை எழுதிச் செல்கிறார்கள் சிலர்.

கற்சிலைக்கு பால் எதற்கு என்று கேட்ட பகுத்தறிவே…
சிமெண்ட் சிலாப்பிற்கு பிளாஸ்ட்டிக் கேனில் பால் எதற்கு?
கேட்கிறீர்களா?
ஆம் நான் பால் ஊற்றினேன்
அது கலைஞருக்காக இல்லை
அந்தத் தமிழ்ப் பாலில் இந்த ஆவின் பால் தூய்மையாகட்டும் என்று…

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

சடங்கு செய்தேன்….
அது கலைஞருக்காக அல்ல
சடங்கு செய்வோரும் வர வேண்டும் என்பதற்காக!
இந்த சமூக அக்கறை தவறென்றால் நான் குற்றவாளியே
– என்று கலைஞரின் பராசக்தி வசனத்தை டப் செய்து கவிஞரின் குரலாகப் பதிவு செய்திருக்கிறார்கள்…

இது போதாதென்று டிவிட்டரில் #பாலூற்றியபகுத்தறிவுதிமுக என்ற ஹேஷ் டேக்கில்   வைரமுத்து படம் பரவலாகிறது.

சிலைக்கு பால் எதற்கு என்றவர்கள்…
சிமிண்ட் சிலாப்பிற்கு பால் ஊற்றுகிறார்கள்..
அடடே! – என்று கவிதை மழை பொழிகிறார்கள்.

 

vairamuthu milk karunanithi2 - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img