வசமாய் சிக்கிய வய்ரமுத்து! பாலூத்திய பகுத்தறிவுப் பாசத்துக்கு வெச்சி செய்யும் வலைத்தள வாசிகள்!

vairamuthu milk karunanithi - 2026

சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று காலை தன் மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு பால் தெளிக்கச் சென்றார். கையில் ஒரு பிளாஸ்டிக் புட்டியை வைத்து, அதில் பால் எடுத்து, கையில் ஊற்றி, கருணாநிதி சமாதியில் சிமிண்ட் பலகையில் ஊற்றிவிட்டு வந்தார்.

இந்தப் புகைப்படம் இன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து பலத்த விவாதங்கள் அவற்றில் எழுந்து வருகின்றன. காரணம், பால் ஊற்றுதல் பகுத்தறிவில் சேருமா என்பதுதான்!

ஒரு மனிதரின் மரணம் எத்தனை நாத்திகவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது; மரணம் சோகமானது மட்டுமல்ல பல சமயங்களில் பகுத்தறிவுவாதிகளின் போலித் தனத்தையும் அல்லவா வெளிச்சம் போட்டு காட்டுகிறது – என்று கருத்து தெரிவிக்கிறார்கள் பலர்.

தமிழ்ப் பால் ஊட்டிய தலைமகற்கு இந்தக் கவிப் பால் ஊற்றியது ஆவின் பால்.. – என்று பாலூற்றும் வைபவத்துக்கு கவிதை எழுதிச் செல்கிறார்கள் சிலர்.

கற்சிலைக்கு பால் எதற்கு என்று கேட்ட பகுத்தறிவே…
சிமெண்ட் சிலாப்பிற்கு பிளாஸ்ட்டிக் கேனில் பால் எதற்கு?
கேட்கிறீர்களா?
ஆம் நான் பால் ஊற்றினேன்
அது கலைஞருக்காக இல்லை
அந்தத் தமிழ்ப் பாலில் இந்த ஆவின் பால் தூய்மையாகட்டும் என்று…

சடங்கு செய்தேன்….
அது கலைஞருக்காக அல்ல
சடங்கு செய்வோரும் வர வேண்டும் என்பதற்காக!
இந்த சமூக அக்கறை தவறென்றால் நான் குற்றவாளியே
– என்று கலைஞரின் பராசக்தி வசனத்தை டப் செய்து கவிஞரின் குரலாகப் பதிவு செய்திருக்கிறார்கள்…

இது போதாதென்று டிவிட்டரில் #பாலூற்றியபகுத்தறிவுதிமுக என்ற ஹேஷ் டேக்கில்   வைரமுத்து படம் பரவலாகிறது.

சிலைக்கு பால் எதற்கு என்றவர்கள்…
சிமிண்ட் சிலாப்பிற்கு பால் ஊற்றுகிறார்கள்..
அடடே! – என்று கவிதை மழை பொழிகிறார்கள்.

 

vairamuthu milk karunanithi2 - 2026

2 COMMENTS

  1. கற்சிலைவடிவாய் தெய்வத்தை வழிபடுதலோ, பால் அபிஷேகம் செய்தது எதற்கு என்று கேட்ட இந்த இந்த போலி பகுத்தறிவுள்ள மனிதன், இன்று சமாதியிலுள்ள சிமெண்ட் தளத்துக்கு பால் ஊற்றுகிறான். வெட்ககேடல்லவா ? கருணாநிதியின் மரணம் அத்தனை நாத்திகவாதிகளையும், பகுத்தறிவாதிகளையும், போலி வேஷதாரிகளையுமல்லவா தோலுரித்துக்காட்டுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories