28-03-2023 9:41 PM
More
    Homeஉரத்த சிந்தனைவசமாய் சிக்கிய வய்ரமுத்து! பாலூத்திய பகுத்தறிவுப் பாசத்துக்கு வெச்சி செய்யும் வலைத்தள வாசிகள்!

    To Read in other Indian Languages…

    வசமாய் சிக்கிய வய்ரமுத்து! பாலூத்திய பகுத்தறிவுப் பாசத்துக்கு வெச்சி செய்யும் வலைத்தள வாசிகள்!

    vairamuthu milk karunanithi - Dhinasari Tamil

    சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து இன்று காலை தன் மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு பால் தெளிக்கச் சென்றார். கையில் ஒரு பிளாஸ்டிக் புட்டியை வைத்து, அதில் பால் எடுத்து, கையில் ஊற்றி, கருணாநிதி சமாதியில் சிமிண்ட் பலகையில் ஊற்றிவிட்டு வந்தார்.

    இந்தப் புகைப்படம் இன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து பலத்த விவாதங்கள் அவற்றில் எழுந்து வருகின்றன. காரணம், பால் ஊற்றுதல் பகுத்தறிவில் சேருமா என்பதுதான்!

    ஒரு மனிதரின் மரணம் எத்தனை நாத்திகவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது; மரணம் சோகமானது மட்டுமல்ல பல சமயங்களில் பகுத்தறிவுவாதிகளின் போலித் தனத்தையும் அல்லவா வெளிச்சம் போட்டு காட்டுகிறது – என்று கருத்து தெரிவிக்கிறார்கள் பலர்.

    தமிழ்ப் பால் ஊட்டிய தலைமகற்கு இந்தக் கவிப் பால் ஊற்றியது ஆவின் பால்.. – என்று பாலூற்றும் வைபவத்துக்கு கவிதை எழுதிச் செல்கிறார்கள் சிலர்.

    கற்சிலைக்கு பால் எதற்கு என்று கேட்ட பகுத்தறிவே…
    சிமெண்ட் சிலாப்பிற்கு பிளாஸ்ட்டிக் கேனில் பால் எதற்கு?
    கேட்கிறீர்களா?
    ஆம் நான் பால் ஊற்றினேன்
    அது கலைஞருக்காக இல்லை
    அந்தத் தமிழ்ப் பாலில் இந்த ஆவின் பால் தூய்மையாகட்டும் என்று…

    சடங்கு செய்தேன்….
    அது கலைஞருக்காக அல்ல
    சடங்கு செய்வோரும் வர வேண்டும் என்பதற்காக!
    இந்த சமூக அக்கறை தவறென்றால் நான் குற்றவாளியே
    – என்று கலைஞரின் பராசக்தி வசனத்தை டப் செய்து கவிஞரின் குரலாகப் பதிவு செய்திருக்கிறார்கள்…

    இது போதாதென்று டிவிட்டரில் #பாலூற்றியபகுத்தறிவுதிமுக என்ற ஹேஷ் டேக்கில்   வைரமுத்து படம் பரவலாகிறது.

    சிலைக்கு பால் எதற்கு என்றவர்கள்…
    சிமிண்ட் சிலாப்பிற்கு பால் ஊற்றுகிறார்கள்..
    அடடே! – என்று கவிதை மழை பொழிகிறார்கள்.

     

    vairamuthu milk karunanithi2 - Dhinasari Tamil

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    2 COMMENTS

    1. கற்சிலைவடிவாய் தெய்வத்தை வழிபடுதலோ, பால் அபிஷேகம் செய்தது எதற்கு என்று கேட்ட இந்த இந்த போலி பகுத்தறிவுள்ள மனிதன், இன்று சமாதியிலுள்ள சிமெண்ட் தளத்துக்கு பால் ஊற்றுகிறான். வெட்ககேடல்லவா ? கருணாநிதியின் மரணம் அத்தனை நாத்திகவாதிகளையும், பகுத்தறிவாதிகளையும், போலி வேஷதாரிகளையுமல்லவா தோலுரித்துக்காட்டுகிறது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    seven − 5 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...