December 5, 2025, 4:59 PM
27.9 C
Chennai

அளுநர் வாகனத்தை ஓவர் டேக் செய்து அலப்பறையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு!

19 May28 governer - 2025

சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்ற வாகனத்தை முந்திச் சென்று, அமைதியைக் குலைத்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றிரவு பாதுகாப்பு வாகனங்கள் சூழ சென்னை கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலை வழியே, ஆளுநர் மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் அந்தப் பகுதிகளில் போக்குவரத்தை நிறுத்தியிருந்தனர் போலீஸார். ஆனால் நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 7 பேர் திடீரென போலீசாரின் தடுப்பையும் மீறிக் கொண்டு, சாலையில் குறுக்கே பாய்ந்தனர். தொடர்ந்து, ஆளுநரின் கார்கள் அணி வகுப்பை அதிவேகத்தில் முந்திச் செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த, உடன் வந்த பாதுகாவலர்கள் விரைந்து செயல்பட்டு நான்கு இரு சக்கர வாகனங்களையும் சுற்றி வளைத்துப் பிடித்னர்.

பின்னர், 7 பேரும் வாகனங்களுடன் அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தினேஷ், நவீன், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மரிய அந்தோணி, ஹரி பிரசாத், தனியார் நிறுவன ஊழியர்கள் அருண், கணேஷ், லோகேஷ் என தெரிய வந்தது.

இந்த 7 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. தொடர்ந்து, அவர்களின் வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories