பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

azagiri perani1 - 2026சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

சென்னையில் நடந்த பேரணிக்கு எந்தக் காரணமும் இல்லை; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடந்தது எனக் கூறியுள்ளார் அழகிரி.

திமுக., தலைவராக அறிவிக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி இன்று பேரணியாகச் சென்றார்.

இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே துவங்கிய இந்தப் பேரணியில் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்புச் சட்டை அணிந்தபடி பங்கேற்றனர். பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்தப் பேரணிக்காக, சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

alagiri perani4 - 2026

தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்ற மு.க.அழகிரி, கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன், மகள் உள்பட ஆதரவாளர்கள் பலரும் சென்றனர்.

இந்தப் பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கலைஞர் மறைந்த 30வது நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், என் விசுவாசிகள், பொதுமக்கள், அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

alagiri perani2 - 2026

பேரணிக்கு ஒத்துழைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக் கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த டிவி, பத்திரிகையாளர்கள், நாளிதழ்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பேரணிக்கு எந்தவிதக் காரணமுமில்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே வந்தோம். பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று கேள்வி எழுப்பினார் மு.க.அழகிரி!

alagiri perani3 - 2026

அழகிரியின் திமுக அமைதிப் பேரணியில் கூட்ட நெரிசலில் கம்பம் திமுக முன்னாள் சேர்மன் இளங்கோவன் மயக்கம் அடைந்தார். அது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories