பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

azagiri perani1 - 2026சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

சென்னையில் நடந்த பேரணிக்கு எந்தக் காரணமும் இல்லை; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடந்தது எனக் கூறியுள்ளார் அழகிரி.

திமுக., தலைவராக அறிவிக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி இன்று பேரணியாகச் சென்றார்.

இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே துவங்கிய இந்தப் பேரணியில் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்புச் சட்டை அணிந்தபடி பங்கேற்றனர். பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்தப் பேரணிக்காக, சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

alagiri perani4 - 2026

தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்ற மு.க.அழகிரி, கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன், மகள் உள்பட ஆதரவாளர்கள் பலரும் சென்றனர்.

இந்தப் பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கலைஞர் மறைந்த 30வது நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், என் விசுவாசிகள், பொதுமக்கள், அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

alagiri perani2 - 2026

பேரணிக்கு ஒத்துழைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக் கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த டிவி, பத்திரிகையாளர்கள், நாளிதழ்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பேரணிக்கு எந்தவிதக் காரணமுமில்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே வந்தோம். பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று கேள்வி எழுப்பினார் மு.க.அழகிரி!

alagiri perani3 - 2026

அழகிரியின் திமுக அமைதிப் பேரணியில் கூட்ட நெரிசலில் கம்பம் திமுக முன்னாள் சேர்மன் இளங்கோவன் மயக்கம் அடைந்தார். அது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories