பேரணிக்கு வந்த ஒன்றரை லட்சம் பேரை நீக்க ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா? : அழகிரி கேள்வி

azagiri perani1 - 2026சென்னை: அமைதிப் பேரணிக்கு ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்காங்க.! இவங்க மொத்த பேரையும் நீக்க ஸ்டாலினுக்கு தைரியமிருக்கா.? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

சென்னையில் நடந்த பேரணிக்கு எந்தக் காரணமும் இல்லை; கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே இந்தப் பேரணி நடந்தது எனக் கூறியுள்ளார் அழகிரி.

திமுக., தலைவராக அறிவிக்கப் பட்டுள்ள மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு எதிராக அவரது அண்ணன் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி இன்று பேரணியாகச் சென்றார்.

இன்று காலை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே துவங்கிய இந்தப் பேரணியில் அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருப்புச் சட்டை அணிந்தபடி பங்கேற்றனர். பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்தப் பேரணிக்காக, சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

alagiri perani4 - 2026

தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் பேரணியாகச் சென்ற மு.க.அழகிரி, கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மகன், மகள் உள்பட ஆதரவாளர்கள் பலரும் சென்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்தப் பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கலைஞர் மறைந்த 30வது நினைவு நாளை முன்னிட்டு அமைதிப் பேரணி நடந்தது. இதில் கலந்து கொண்ட கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், என் விசுவாசிகள், பொதுமக்கள், அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை அவர்களது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

alagiri perani2 - 2026

பேரணிக்கு ஒத்துழைத்த போலீசாருக்கு நன்றி தெரிவிக் கிறேன். எங்களுக்கு ஆதரவு தந்த டிவி, பத்திரிகையாளர்கள், நாளிதழ்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பேரணிக்கு எந்தவிதக் காரணமுமில்லை. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே வந்தோம். பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டனர். அவர்களை கட்சியை விட்டு நீக்குவார்களா? என்று கேள்வி எழுப்பினார் மு.க.அழகிரி!

alagiri perani3 - 2026

அழகிரியின் திமுக அமைதிப் பேரணியில் கூட்ட நெரிசலில் கம்பம் திமுக முன்னாள் சேர்மன் இளங்கோவன் மயக்கம் அடைந்தார். அது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories