முக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்!

sathuragiri mahalingam - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்ராயிருப்பை அடுத்து உள்ளது சதுரகிரி மலை. சித்தர்கள் வாசம் செய்யும் மலை என்று பக்தர்கள் கொண்டாடும் சதுரகிரி மலைக்கு அமாவாசை, பௌர்ணமி தினங்களில் அதிகளவிலான பக்தர்கள் சென்று மலை மேல் இருக்கும் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சிவாலயங்களை தரிசித்து வருவர்.

வனத்துறை கட்டுப் பாட்டில் பராமரிக்கப் படும் பகுதி என்பதால், இந்தக் கோயில்களுக்குச் செல்ல வனத்துறை அனுமதி தேவை. இந்நிலையில் கடந்த நில நாட்களாகப் பெய்து வந்த மழையால், சதுரகிரி பகுதியில் உள்ள ஆற்றில் நீர் அதிக அளவில் வருவதாலும், பாதுகாப்பற்ற வழி என்பதாலும்  சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் வனத்துறை தடை விதித்துள்ளது.

முன்னதாக நேற்று அனுமதிக்கப்பட்டு, திடீரென்று இன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

முன்னதாக, புரட்டாசி 3ஆம் சனிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படும். ஆனால் ரெட் அலார்ட் என்ற காரணம் சொல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள #சதுரகிரி #காட்டழகர_கோவில் #ராக்காச்சி_அம்மன்_கோவில்  #அய்யனார்_கோவில் #சாஸ்தா_கோவில்  #பேச்சியம்மன்_கோவில் என்று புகழ்பெற்ற எந்தக் கோவிலுக்கும் பக்தர்களும் பூசாரிகளும் செல்ல தடை விதிக்கப் பட்டது பக்தர்களுக்கு பெரும் வேதனையைத் தந்தது.

எத்தகைய மழை வெள்ளத்தை எல்லாம் இந்தப் பகுதிகளைத் தாண்டி தரிசித்து இருப்போம் இப்போது மழை வருமா வராதா எனக் கூடத் தெரியாது ஆனால் ஆண்டவனை தரிசிக்க தடையா என்று அன்பர்கள் கொதித்துப் போய் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு ஏற்ப திடீர் என ரெட் அலார்ட் பின்னர் விலக்கிக் கொள்ளப் பட்டது. ஆனால், பக்தர்களுக்கு இந்த வருடம் 3ஆம் சனிக்கிழமை தரிசனம் இல்லாமல் போனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories