ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இயற்பெயர் கொடுத்து கேள்வி கேட்பது மாபெரும் தவறா?! அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?!

tnpsc question per - 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈ.வே, ராமசாமி நாயக்கரின் பெயரை அவருடைய சாதி பெயரான நாயக்கர் என்ற பெயருடன் அச்சிட்டு கேள்வித்தாளில் குறிப்பிடப் பட்டிருந்ததால், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் ஊடகங்களும் அதை சர்ச்சை ஆக்கி வருகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!

குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. பொது அறிவுப் பிரிவில் “திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?” என்ற கேள்விக்கு விடையான 4 பதில்களில் ஈ.வே.ரா.,வின் பெயர் மட்டும் சாதிப் பெயருடனும் அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், ஈ.வெ.என்பதற்கு பதிலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என குறிப்பிட்டிருந்தது, அவரது பெயரை தவறாகக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறி, திமுக.,வினர் சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களில் ஏற்படக் கூடிய தவறுகள் பிழைகள் குறித்து பலரும் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி தான் வருகின்றனர். இருப்பினும், புத்தகங்களில் ஏற்படும் பிழைகளைப் போல், வினாத் தாள்களிலும் பிழைகளை அனுமதிப்பது, மிக மோசமானதுதான்!

manonmaniiam sundaranar university - 2026

இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் தமிழ்த் தேர்வு நடைபெற்றது. இந்த வினாத்தாளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்ற அவரின் பெயரை தவறாகவே, தேசிய விநாயகம் பிள்ளை என்றே குறிப்பிட்டிருந்தார்கள். மேலும், வைரமுத்து குறித்த கேள்விகள் எல்லாம் கேட்கப் படும் அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை வழங்கிய மனோன்மணீயம் சுந்தரனார் பெயரில் உள்ள பல்கலையில் வினாத்தாள்கள் வடிவமைக்கப் படுவது வேதனையான ஒன்றுதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories