பாம்பன் பால விரிசல்… தொடரும் ஆய்வு… ரயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதி!

rameswaram bridge - 2026

பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு செய்து வருகிறார்.

நேற்று மதியம் 100வருடங்களை கடந்த பாம்பன் தூக்கு பாலத்தில் அதிர்வு காரணமாக விரிசல் எற்ப்பட்டது இதனால் ராமேஸ்வரத்திலிருந்து – சென்னை செல்ல கூடிய அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டன. அதே போன்று இன்று காலை சென்னையில் இருந்து  ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில் காலை 8.15 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சென்னையில் இருந்து வந்திருந்த தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக்கு பின் ரயில் இன்ஞ்சினை வைத்து சோதனை ஓட்டம் நடத்தவுள்ளனர்.

மண்டபம் பாம்பன் கடல் பகுதியை இணைக்கக் கூடிய பாம்பன் ரயில் தூக்கு பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை பராமரிப்பு பணிக்காக திறக்க முற்பட்ட போது அதன் இணைப்பு பகுதி உடைந்து விட்டதால் ரயில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் திருச்சியில் இருந்து செல்லும் ராமேஸ்வரம் ரயில் மண்டபம் பகுதியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த திடீர் பிரச்னையால், சுற்றுலா ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல சாலை வழியை பயணிகள் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாததால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories