பாம்பன் பால விரிசல்… தொடரும் ஆய்வு… ரயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் அவதி!

rameswaram bridge - 2026

பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு செய்து வருகிறார்.

நேற்று மதியம் 100வருடங்களை கடந்த பாம்பன் தூக்கு பாலத்தில் அதிர்வு காரணமாக விரிசல் எற்ப்பட்டது இதனால் ராமேஸ்வரத்திலிருந்து – சென்னை செல்ல கூடிய அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டன. அதே போன்று இன்று காலை சென்னையில் இருந்து  ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில் காலை 8.15 மணியளவில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சென்னையில் இருந்து வந்திருந்த தென்னக ரயில்வேயின் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வுக்கு பின் ரயில் இன்ஞ்சினை வைத்து சோதனை ஓட்டம் நடத்தவுள்ளனர்.

மண்டபம் பாம்பன் கடல் பகுதியை இணைக்கக் கூடிய பாம்பன் ரயில் தூக்கு பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் சரியாக பராமரிக்காததால் துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தை பராமரிப்பு பணிக்காக திறக்க முற்பட்ட போது அதன் இணைப்பு பகுதி உடைந்து விட்டதால் ரயில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் திருச்சியில் இருந்து செல்லும் ராமேஸ்வரம் ரயில் மண்டபம் பகுதியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த திடீர் பிரச்னையால், சுற்றுலா ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல சாலை வழியை பயணிகள் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடு ஏதும் செய்யாததால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories