மேகேதாட்டு விவகாரம்.. தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்: ஜி.கே.மணி

gkmani - 2026

கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்க்கு மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுத்திருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நடவடிக்கை என்று கரூரில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி குற்றம் சாட்டினார்.

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பா,ம.க செயற்குழு கூட்டத்திற்கு சிரப்பு அழைப்பாளராகவும் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கு கட்சி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிடவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி நாமக்கல் மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு கரூர் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில் சிறப்பன வரவேற்பு அளிக்கப்பட்டது..

அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தின் பா.ம.க ஆணி வேரான புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை மற்றும் அச்சமாபுரம் பகுதிகளில் பா.ம.க கொடியேற்றினார்.

அப்போது மாற்றுக்கட்சியில் இருந்து பலர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.கவில் இணைந்தனர். தொடர்ந்து அவர் பாமக.,வினரின் இல்லங்களுக்குச் சென்று, குடும்பத்தினருடன் அளவளாவினார். பின் கரூர் – கோவை சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் ஏற்ப்பாடு செய்யப்படிருந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, புதிய நிர்வாகிகளுக்கு வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தளில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டி கஜா புயல் கடுமையான பாதிப்பை உண்டாகியுள்ளது குறிப்பாக நாகை , தஞ்சாவூர் , கடலூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.  மாநில அரசு நிவாரண பணிகளை  மேற்கொண்டு வருகிறது என்றாலும், பொதுமக்கள் இன்னமும் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

கஜா புயலால் கரூர் மாவட்டம் குளித்தலை கடவூர் தோகைமலை பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாழை , நெல் பயிர்கள் பாதிக்கப்படுள்ளது  அவற்றுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை

கடந்த காலங்களில் மேட்டூர் அணை நிரம்பிய போது ஈரோடு கரூர் நாமக்கல் பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டியிருந்தால் தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலப்பதை தவிர்த்திருக்கலாம்.

கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு திட்ட அறிக்கை கொடுக்க அனுமதித்திருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கக்கூடிய நடவடிக்கை; தமிழ்நாட்டிற்கு அநீதி நடவடிக்கை என்றார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகத்தான் தமிழக மக்கள் பார்கின்றனர். எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நீர் வள ஆணைய தலைவரால் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை திரும்பப்பெற்று தமிழகத்தின் உரிமை காக்கப்பட வேண்டும்.

இதற்கு தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. முன்னதாக 2014ல் 2015ல் இரண்டு சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு அதனை கண்டு கொள்ளவில்லை அதனைப் போலவே இந்தத் தீர்மானம் உள்ளது. அதனால் தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்,

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அனைத்து கட்சி தலைவர்களையும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு தில்லி சென்று தமிழகத்தின் உரிமையை காத்திட வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்திற்க்கு சென்று போர்க் கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories