அண்ணா பல்கலை., வினாத்தாள் வெளியான விவகாரம்: மாணவர்கள் இருவர் கைது; தற்காலிக பணியாளர் தலைமறைவு

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

16 June04 anna university - 2026

அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியானது தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் முன்னரே வினாத்தாள் வெளியானதன் காரணமாக கடந்த 3 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆர்.எம்.கே. மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் தமது உறவினர் மூலம் வினாத்தாளை சுரேஷ்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். அதை தமது நண்பர் ஹரிகிருஷ்ணனிடம் அவர் பகிர்ந்துள்ளார். ஹரிகிருஷ்ணன், அதை தமது பிற நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். இவ்வழக்கில், வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக,

கேள்வித்தாளை விற்பனை செய்தவர் பல்கலை. தற்காலிக ஊழியர் காஞ்சனா என தகவல். வெளியாகியுள்ளது.

தலைமறைவாகியுள்ள காஞ்சனாவை தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

இந்நிலையில், இத்தகைய ரகசிய பணியில் தற்காலிக ஊழியரை நியமித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை.யில் 500 பேர் தற்காலிக பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img