December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

கஜா… நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல மேலும் 15 நாட்கள் சரக்கு கட்டண விலக்கு!

piyush goel pon radhakrishnan - 2025

மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல அடுத்த 15 நாட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்று கூறப் பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டதுடன், உயிர் மற்றும் பொருட் சேதங்களும் பெருமளவில் ஏற்பட்டது.

புயல் பாதித்த 6 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டார். பின்னர் அவர் தான் பொறுப்பு வகிக்கும் கப்பல் துறை மூலமாக 3 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கஜா புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் வழங்கியதுடன் மத்திய அரசின் பிற துறைகள் மூலமும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்தார்.

ponnar letter - 2025

இதனிடையே நெடுஞ்சாலை போக்குவரத்து, விமானம் மற்றும் ரயில்வே துறை மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு போக்குவரத்து சரக்கு கட்டணங்களை விலக்க கோரிக்கை வைத்ததை அடுத்து சம்மந்தப்பட்ட துறைகள் கட்டண விலக்கு அளித்தன.

மேலும் கடந்த ஜன.7இல் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.12.09 கோடி மதிப்பிலான மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் குஜராத் மற்றும் பிற இடங்களிலிருந்து அனுப்புவதற்கு தயாராக இருப்பதாகவும், போக்குவரத்து சரக்கு கட்டணம் காரணமாக நிவாரணப் பொருட்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர், இன்னும் சில காலங்களுக்கு சரக்கு கட்டணத்தை விலக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ponnar letter1 - 2025

அதையடுத்து ரயில்வே துறையின் மூலம் ஏற்கெனவே சரக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டதற்கான உத்தரவு மேலும் 15 நாட்கள் தொடர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories