சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம்-திருவள்ளூர்- வட்டப்பாதையில் புறநகர் ரயில்கள்!

17 29July train - 2026

சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் – திருவள்ளூர் – சென்னை என ஒரு வட்டப் பாதையில் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மார்க்கத்திலும், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்திலும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. இவற்றில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்தப் பாதைகளில் பயணம் செய்வோர் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தப் பகுதிகளுக்கான புறநகர் மின்சார ரயில் சேவையை நீட்டிக்கும் வகையில் புதிய பாதை அமைத்து புதிய ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தக்கோலம், அரக்கோணம் பாதையில் வரை 10 கி.மீ தூரத்துக்கு புதிய மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு, மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தப் புதிய பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள், டிராலி மற்றும் ரயில்களை இயக்கி, சோதனை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் 110 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த தடத்தில் ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் முதல்முறையாக வட்ட பாதையில் மின்சார ரயில்சேவை தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘தில்லி, கொல்கத்தாவில் ஏற்கெனவே வட்டப் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தக்கோலம் – அரக்கோணம் இடையே மின்மயமாக்கல் பாதையுடன் கூடிய புதிய பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், ரயில் சேவை தொடங்க பாதுகாப்பு ஆணையரகம் விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளது. அதன் பின்னர் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் – திருவள்ளூர் – சென்னைக்கு வட்ட பாதையில் முதல்முறையாக மின்சார ரயில்சேவையை விரைவில் தொடங்கவுள்ளோம்… என்றனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories