February 23, 2026, 9:48 AM
26 C
Chennai

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம்-திருவள்ளூர்- வட்டப்பாதையில் புறநகர் ரயில்கள்!

17 29July train - 2026

சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் – திருவள்ளூர் – சென்னை என ஒரு வட்டப் பாதையில் புறநகர் மின்சார ரயில்சேவை தொடங்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மார்க்கத்திலும், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்திலும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. இவற்றில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்தப் பாதைகளில் பயணம் செய்வோர் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தப் பகுதிகளுக்கான புறநகர் மின்சார ரயில் சேவையை நீட்டிக்கும் வகையில் புதிய பாதை அமைத்து புதிய ரயில் சேவை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தக்கோலம், அரக்கோணம் பாதையில் வரை 10 கி.மீ தூரத்துக்கு புதிய மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு, மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தப் புதிய பாதையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள், டிராலி மற்றும் ரயில்களை இயக்கி, சோதனை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் 110 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த தடத்தில் ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் முதல்முறையாக வட்ட பாதையில் மின்சார ரயில்சேவை தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘தில்லி, கொல்கத்தாவில் ஏற்கெனவே வட்டப் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தக்கோலம் – அரக்கோணம் இடையே மின்மயமாக்கல் பாதையுடன் கூடிய புதிய பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், ரயில் சேவை தொடங்க பாதுகாப்பு ஆணையரகம் விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளது. அதன் பின்னர் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் – திருவள்ளூர் – சென்னைக்கு வட்ட பாதையில் முதல்முறையாக மின்சார ரயில்சேவையை விரைவில் தொடங்கவுள்ளோம்… என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories