ராணுவ வீரர்க்கு வீரவணக்க போஸ்டர்… யாரைக் கேட்டு ஒட்டினாய்? புகார் அளித்தவரை தாக்க முயன்ற உதவி ஆய்வாளர்! செங்கோட்டையில் அதிர்ச்சி!

sengottai posters - 2026

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரைக்கேட்டு போஸ்டர் ஒட்ட வேண்டும்?! கட்டாயம் போலீஸாரிடம் கேட்டுவிட்டு… இங்கே ஒட்டலாமா? இந்த இந்த வாசகங்கள் இடம் பெறலாமா? இப்படி ஒட்டலாமா? இப்படி போஸ்டர் அடிக்கலாமா? ராணுவம் என்ற வார்த்தை போடலாமா? பயங்கரவாதி தாக்குதல் என்று போடலாமா? இல்லை இஸ்லாமிய இயக்கங்கள் அச்சடித்து ஒட்டியது போல்… தாங்களே குண்டு வைத்து இறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் என்று போட்டு அஞ்சலி செலுத்த வேண்டுமா? அல்லது தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய மதவெறி இயக்கங்கள் அச்சடித்து ஒட்டியது போல்… ‘மோடியின் சதிக்கு பலியான ராணுவ வீரர்களுக்கு’ வீரவணக்கம் என்று போஸ்டர் அச்சடிக்க வேண்டுமா என்பதையெல்லாம் தீர்மானிக்கும் நிலையில் இருப்பவர்கள் காவல் அதிகாரிகள்! அத்தகைய அதிகாரிகளிடம் கேட்காமல் போஸ்டர் அடித்து ஒட்டினால்… இப்படித்தான் கேட்பார்கள்!

எப்படி..? தனக்கு நேர்ந்த அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறார் செங்கோட்டை நகர வி.எச்.பி.,யைச் சேர்ந்த முருகேசன்.

பாகிஸ்தானிய பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத தாக்குதலில் இந்திய துணை பாதுகாப்பு படையினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. நாடெங்கிலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக செங்கோட்டை நகரிலும் வீர வணக்கம் சொல்லி போஸ்டர் அடித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஒட்டியிருந்தார்கள் விஎச்பி அமைப்பினர்.

போஸ்டர் ஒட்டியிருந்த பகுதியும், தனியார் ஹிந்து ஆலயத்திற்கு சொந்தமான கோயில் கட்டடம். அந்த இடத்தின் முன்னே திமுக அதிமுக மற்றும் இஸ்லாமிய கட்சிகளின் கொடிக் கம்பங்கள் எல்லாம் வைக்கப் பட்டிருக்கின்றன! ஆனால் அந்த இடத்தில் நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கு மரியாதை தெரிவித்து வீரவணக்கம் செலுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டது பலரது கண்ணை உறுத்தியுள்ளது. இரவோடு இரவாக விஷமிகள் சிலர் கிழித்துள்ளனர்

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

போஸ்டரை கிழித்தவர்கள் யார் என்று தெரியாத நிலையில், எவரையும் குற்றம் சொல்லாமல், ஒட்டப் பட்ட போஸ்டர்கள் இரவோடு இரவாக கிழிந்த நிலையில் இருப்பது குறித்தும் விசாரிக்குமாறும் ஒரு புகார் கொடுக்க விஎச்பி.,யினர் செங்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கே இருந்த உதவி ஆய்வாளர் மாதவன், புகார் கொடுக்கச் சென்றவர்களை மிரட்டி, யாரைக் கேட்டு போஸ்டர் ஒட்டினாய்? போஸ்டர் ஒட்ட வேண்டியது, பிறகு கிழிச்சிட்டான்னு வந்து புகார் கொடுக்க வேண்டியது என்று அலட்சியமாக பதில் சொன்னதுடன், புகார் கொடுக்க வந்தவர்களை மிரட்டி, அவர்களை ஒருமையில் தரக்குறைவாக திட்டியதுடன், அடிக்கவும் பாய்ந்துள்ளார். இருப்பினும், அவரது புகாரை ஆய்வாளர் வாங்கி வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

இதை அடுத்து தங்களைத் தரக்குறைவாக பேசிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தென்காசி டிஎஸ்பி அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர் விடுப்பில் இருந்ததால், இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு நேர்ந்த பிரச்னைகள் குறித்து மனு எழுதிக் கொடுத்துள்ளனர்.

vhp nellai complaint e1550476271522 - 2026
நெல்லையில் விஎச்பி அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கச் சென்றனர். முன்னதாக காவல் துறையைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்…

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நேற்றுடன் உதவி ஆய்வாளர் மாதவன் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் ஆகியுள்ளார். குற்றாலம் காவல் நிலையத்தில் இருந்து ஓரிரு மாதம் முன்னர்தான் செங்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றமாகி வந்த மாதவன், மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டதில், கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தகாத முறையில் திட்டியதும், அடிக்கப் பாய்ந்ததும் புகார் கொடுக்க வந்த விஎச்பி நகர செயலர் ஏ.முருகேசன் உள்ளிட்டோரை பெரிதும் வருத்தமடையச் செய்ததாகவும், அதனாலேயே புகார் கொடுக்க டிஎஸ்பி அலுவலகம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

வீரர்களுக்கு வீரவணக்கம் சொல்லி போஸ்டர் ஒட்டியது மாபெரும் தவறா? போஸ்டர் ஒட்டியது தேசத் துரோகச் செயலா? அல்லது போஸ்டரை கிழித்தது தேசத் துரோகச் செயலா? என்பதை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் தங்களுக்குள் கலந்தாலோசித்து தீர்மானமாகக் கூறவேண்டியதுதானே என்கின்றனர் புகார் கொடுக்கச் சென்றவர்கள்!

இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர் செங்கோட்டை வி.எச்.பி., நகர செயலாலர் முருகேசன் மற்றும் சிலர். அவர்கள் இன்று காலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர். புகார் மனு அளித்ததற்கான ரசீதும் பெற்றனர்.

nellai sengottai petition - 2026

ஏ.முருகேசன் அளித்த புகாரில்,

ராணுவ மாவீரர்களுக்கான வீரவணக்க சுவரொட்டி சேதப்படுத்தியது சம்பந்தமாக…
செங்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தரக்குறைவாக பேசியது தொடர்பாக புகார்

ஐயா வணக்கம் மாவீரர்களுக்கு வீர வணக்கம் என்கிற வாசகம் தாங்கிய சுவரொட்டிகள் விஹெச்பி பஜ்ரங்தள் சார்பில் செங்கோட்டையில் நேற்று ஒட்டப்பட்டது! அதை சில பயங்கரவாதிகள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனைக் கண்டித்து ஒன்று திரண்டு செங்கோட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றோம்! அப்போது செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு சுரேஷ் குமார் என்பவர், புகார் கொடுக்கச் சென்ற எங்களிடம் யாரைக் கேட்டு சுவரொட்டிகள் ஒட்டினீர்கள் என்று கேட்டு மிரட்டினார்!

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

அதற்கு நாங்கள் இந்த தேசத்திற்காக பாதுகாப்பு வீரர்கள் பலியாகியிருக்கின்றனர் எனவேதான் ஓட்டினோம் என்று கூறியதை அடுத்து உடனிருந்த செங்கோட்டை உதவி ஆய்வாளர் திரு மாதவன் அவர்கள் எங்களைப் பார்த்து டேய் செருக்கியுள்ள… இங்கே இருந்து போயிரு உன் மூஞ்சி மொகரைய உடைக்க வா எனஒருமையிலும் மிக ஆபாசமாகவும் பேசினார்

தேசத்திற்காக பலிதானமான நமது பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சுவரொட்டி ஒட்ட முடியாத நிலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்! இந்த அராஜகப் போக்கு தொடருமேயானால் பாரதம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்” என்று கோரியுள்ளார்.

  • அ. முத்துராமன், நெல்லை செய்தியாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories