December 6, 2025, 11:30 AM
26.8 C
Chennai

பிரசாரத்தை பாதியில் நிறுத்திய முதல்வர் எடப்பாடி! தூக்கிவைத்துக் கொண்டாடும் அதிமுக.,வினர்!

edappadi ambulance - 2025

சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை பாதியில் நிறுத்தி ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தனது 2ஆவது நாள் தேர்தல் பிரசாரத்தை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் இருந்து தொடங்கினார். பின்னர் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் அதிமுக., மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.

முதல்வர் எடப்பாடி அயனாவரத்தில் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து தனது பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதி சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்தது. ஆனால் எடப்பாடியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, அங்கே கூட்டம் திரண்டிருந்தது. இதனால், அந்த சாலை வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை.
இதை கவனித்த எடப்பாடி பழனிசாமி தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தினார். தன் பிரசார வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தச் சொன்ன அவர், பொதுமக்களும் ஒதுங்கி வழிவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

காவலர்கள் போக்குவரத்தை ஒருங்கிணைக்க, ஆம்புலன்ஸ் அதன் பின்னர் விரைந்தது. இதைப் பார்த்த மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதிமுக.,வினர் முதல்வரின் செயலைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories