வேலூரில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று கூறிய சத்யபிரதா சாஹூ வருமான வரித்துறையின் அறிக்கை, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும் என்று கூறினாார்.
சோதனையின் முடிவில் கட்சியின் வேட்பாளருக்கு தொடர்பு இருந்தால், தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என்று கூறிய சத்யபிரதா சாஹு தமிழகத்தில் இதுவரை ரூ.78.12 கோடி பணம், 328 கிலோ தங்கம், 409 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்