December 6, 2025, 5:07 AM
24.9 C
Chennai

வேலூரில் கைப்பற்றப்பட பணம் யாருக்குச் சொந்தமானது என விசாரித்து வருகிறோம்..! சத்யப்ரதா சாஹூ

satyabrata sahoo - 2025

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்த தகவல்…

வாக்களிப்பு மையங்களையும், தேர்தலுக்கான செலவினங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இன்று மாலை காணொளி மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள்/ஆணையர்களுடனும் ஆலோசனை நடத்துகிறோம்.

வருமான வரித்துறை சார்பில் இதுவரை 45 கோடியே 57 லட்சம் பணம் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் சார்பில் முறையான ஆவணங்கள் இல்லாத 94 கோடியே 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 520.65 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (மதிப்பு – 138 கோடி)

இதுவரை 421 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது (மதிப்பு – 1.73 கோடி)

இதுவரை கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் – 10 ஆயிரத்து 198 லிட்டர் (மதிப்பு – 25 லட்சம்)

இதுவரை உரிமத்துடன் 19 ஆயிரத்து 655 ஆயுதங்கள்(துப்பாக்கி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வந்துள்ள 10 கம்பெனி துணை ராணுவத்துடன் மேலும்,150 CAPF கம்பெனி படையினர் தேர்தல் பாதுகாப்பிற்காக வரவுள்ளனர். (1 கம்பெனி – 90 வீரர்கள்)

ஒவ்வொரு தொகுதியையும் 2 செலவின பார்வையாளர்கள் மற்றும் 1 பொது பார்வையாளர் கண்காணித்து வருகின்றனர் (மத்திய சென்னை – 3 செலவின பார்வையாளர்கள், தூத்துக்குடி – 2 பொதுபார்வையாளர்).

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 924 பேர் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினரால் வேலூர் காட்பாடி பகுதியில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத் தொகை யாருக்கு சொந்தமானது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. ஆவணங்கள் பற்றி விரிவான ஆய்வு முடிந்தபின் விவரங்கள் தெரியவரும்.

பறக்கும் படையினரால் பொதுமக்கள் பணம் அதிகளவு கைப்பற்றப்படவில்லை, முறையான ஆவணங்கள் உள்ள பணம் திருப்பி அளிக்கப்படுகிறது. ஆவணங்கள் முறையாக இல்லாத பணம் மட்டுமே கைப்பற்றப்படுகிறது.

தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடிய அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தபால் ஓட்டு மூலம் அடுத்தக்கட்ட தேர்தல் பயிற்சியின்போது வாக்களிக்கலாம், அதற்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று அறிமுகப் படுத்தப்பட்ட “POLL MONITORING” செயலி மூலம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணிகள் முழுமையாக கண்காணிக்கப் பட்டு, அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள் 3.65 லட்சம் பேர் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

சி-விஜில் செயலி மூலம் 1700 புகார்கள் வந்துள்ளது, அதில் 696 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 20 புகார்கள் நிலுவையில் உள்ளன, மேலும் 533 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது… என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories