February 22, 2026, 4:25 AM
25.6 C
Chennai

இன்று மாலை 6 மணியுடன் ஓவர்..! சமூக வலைத்தளங்கள் மூலமும் கூடாது!

satyabrata sahoo - 2026

தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவு பெறுகிறது!

மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது; மாலை 6 மணி முதல் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்யக் கூடாது! வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

மேலும், வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் பொழுது செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்

தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது;

இடைத்தேர்தல் அறிக்கவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு மே 19 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நாளை (ஏப்.,16) மாலை 6 மணிக்கு முடிவடைவதால் தேர்தல் முடியும் வரை இந்த 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யக் கூடாது.

வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி முடிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்கள் அல்லாத பிற தொகுதிகளை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் அந்தந்த தொகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.

வேட்பாளர்கள் எந்த காரணத்திற்காகவும் வாக்காளர்களை ஓட்டுப் போட ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரக் கூடாது. வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு மொபைல் போன் எடுத்து வரலாம். ஆனால் பயன்படுத்தக் கூடாது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் மொபைல் போன் பயன்படுத்த தடையில்லை. நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் விவகாரம் தொடர்பாக எந்த தகவலையும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பக் கூடாது. தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் நடத்த கூடாது.

மதுரை தவிர மற்ற தொகுதிகளில் காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். சித்திரை திருவிழா காரணமாக மதுரை தொகுதியில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் முடியும் வரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் விதிமுறைகள் அமலில் இருக்கும்.

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.132.91 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதை அடுத்து ரூ.65.01 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை மூலம் ரூ.55.02 கோடி பணம் பறிமுதல் செய்யப்படும். எம்எல்ஏ விடுதியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து இதுவரை எந்த தகவலும் தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை. இதுவரை ரூ.286 கோடி மதிப்புள்ள 998 கிலோ தங்கம், 642 கிலோ வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories