சட்டமன்ற தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார்: ரஜினி

rajini - 2026

தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. மேலும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த மாதம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மக்களவைக்கான வாக்கு பதிவு நடந்து கொண்டிருக்கும்போது டிவிட்டர் பதிவுகளில் ஒரு ஹேஷ் டேக் பிரபலமானது! அடுத்த ஓட்டு ரஜினிக்கு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி இருந்தது

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

நேற்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற கேள்விக்கு, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்! அவர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்று கூறினார் ரஜினிகாந்த்!

இந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் ரஜினிகாந்த் அதற்கு அளித்த பதில்களும்…

வாக்குப்பதிவு சென்ற முறை இருந்ததை விட இந்த முறை குறைந்துள்ளதாக கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்

அதற்கு 70 சதவிகிதம் வாக்குப்பதிவு என்பது நல்ல வாக்கு பதிவு தான்! சென்னையில் இருப்பவர்கள் மட்டும் நான்கு நாள் விடுமுறைக்காக ஊருக்கு சென்றுவிட்டனர்! அதனால் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்து விட்டது என்றார்!

கடும் வெயிலில் மக்கள் மிகவும் அவதிப்பட்டார் இதனால் வாக்குப்பதிவு மையங்களை அதிகரிக்க வேண்டும் என்கிறார்களே என்று கேட்ட போது…

கண்டிப்பாக வாக்குப் பதிவு மையங்கள் அதிகரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார் ரஜினிகாந்த்!

தேர்தலில் அதிகப்படியாக பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன என்று கேட்டபோது

அதற்கு தேர்தல் ஆணையம் கடந்த முறையைவிட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது! தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றார்

வாக்குப்பதிவின் போது சில இடங்களில் வன்முறைகள் நடந்து உள்ளதாக தகவல் வெளியானதே என்று கேட்டபோது…

இல்லை கடந்த தேர்தல்களைப் ஒப்பிடும் போது குறைவான அளவில்தான் வன்முறை நடைபெற்றுள்ளது என்றார்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு

மே 23 ஆம் தேதி தெரிந்துவிடும் என்றார் ரஜினிகாந்த்!

18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தேர்தலில் சந்திப்பீர்களா என்று கேட்டபோது,

முடிவுகள் வரட்டும் அதன் பிறகு முடிவு செய்வோம் என்றார்

ஒருவேளை ஆட்சி மாற்றத்தில் தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது

சட்டமன்றத் தேர்தல் வந்தால் எப்போது வேண்டுமானாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன் என்று கூறினார் ரஜினிகாந்த்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories