படியில் பயணித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published:

நாமக்கல்: படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர், விபத்தில் மரணம் அடைந்தனர். ஈரோட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் படியில் தொங்கியபடி, பயணம் செய்தனர். அவர்கள் சென்ற பஸ், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள ஐந்துபனை என்ற இடத்தின் அருகே வந்தபோது, சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை திடீரென உரசியுள்ளது. அப்போது, படிக்கட்டில் தொங்கியபடி வந்த தமிழ்ச்செல்வன், சரவணக்குமார், பிரேம்குமார் ஆகிய மூன்று மாணவர்களும் ஆட்டோ மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img