February 21, 2026, 2:20 PM
30.4 C
Chennai

போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை தீர்ந்துவிட்டது போல..! திமுக., எம்.எல்.ஏக்கள் உயர்த்தப்பட்ட சம்பளம் பெற்றனர்!

02 July26 DMK protest - 2026

தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தபட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கொடுத்த கடிதத்தை திமுக., எம்.எல்.ஏ.,க்கள் திரும்பப் பெற்றதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க் களுக்கு, சம்பள உயர்வு வேண்டாம்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து  அவைத்தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

இதனால் அவைத்தலைவரிடம் கொடுத்த கடிதத்தை தி.மு.க., – எம்.எல். ஏ.,க்கள் திரும்பப் பெற்றால் மட்டுமே சம்பள உயர்வு என அரசு அறிவித்தது!

இந்நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கக் கோரி, சட்டசபை செயலரிடம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடிதம் அளித்தார். இதையடுத்து அவர்களுக்கு, இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப் படுகிறது. அத்துடன் நிலுவைத் தொகையான ரூ. 6.50 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

இந்த வகையில், மு.கருணாநிதிக்கு வழங்கப் பட வேண்டியநிலுவைத் தொகையையும் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி எனில், சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னது மக்களை, போக்குவரத்துத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குத்தானா என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பொங்கித் தீர்த்துள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னீர்களே…. அப்படி எனில், இப்போது எல்லா போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையும் தீர்வு கண்டு முடிவாகிவிட்டதா? எல்லாருக்கும் அவர்களின் பிஎஃப், ரிடையர்மெண்ட் பெனிஃபிட், நிலுவைத் தொகை எல்லாம் கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்!

எடப்பாடி பழனிச்சாமி அரசு தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது  உண்மை தான்! அவர்களே போட்ட வழக்குகளை அவர்களே வாபஸ் பெறுகிறார்கள், கொடுத்த கடிதத்தை அவர்களே திரும்பப் பெறுகிறார்கள் என்று கலாய்க்கின்றனர் நெட்டிசன்ஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories