போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை தீர்ந்துவிட்டது போல..! திமுக., எம்.எல்.ஏக்கள் உயர்த்தப்பட்ட சம்பளம் பெற்றனர்!

02 July26 DMK protest - 2026

தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தபட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கொடுத்த கடிதத்தை திமுக., எம்.எல்.ஏ.,க்கள் திரும்பப் பெற்றதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க் களுக்கு, சம்பள உயர்வு வேண்டாம்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து  அவைத்தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

இதனால் அவைத்தலைவரிடம் கொடுத்த கடிதத்தை தி.மு.க., – எம்.எல். ஏ.,க்கள் திரும்பப் பெற்றால் மட்டுமே சம்பள உயர்வு என அரசு அறிவித்தது!

இந்நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கக் கோரி, சட்டசபை செயலரிடம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடிதம் அளித்தார். இதையடுத்து அவர்களுக்கு, இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப் படுகிறது. அத்துடன் நிலுவைத் தொகையான ரூ. 6.50 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

இந்த வகையில், மு.கருணாநிதிக்கு வழங்கப் பட வேண்டியநிலுவைத் தொகையையும் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி எனில், சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னது மக்களை, போக்குவரத்துத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குத்தானா என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பொங்கித் தீர்த்துள்ளனர்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னீர்களே…. அப்படி எனில், இப்போது எல்லா போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையும் தீர்வு கண்டு முடிவாகிவிட்டதா? எல்லாருக்கும் அவர்களின் பிஎஃப், ரிடையர்மெண்ட் பெனிஃபிட், நிலுவைத் தொகை எல்லாம் கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்!

எடப்பாடி பழனிச்சாமி அரசு தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது  உண்மை தான்! அவர்களே போட்ட வழக்குகளை அவர்களே வாபஸ் பெறுகிறார்கள், கொடுத்த கடிதத்தை அவர்களே திரும்பப் பெறுகிறார்கள் என்று கலாய்க்கின்றனர் நெட்டிசன்ஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories