போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை தீர்ந்துவிட்டது போல..! திமுக., எம்.எல்.ஏக்கள் உயர்த்தப்பட்ட சம்பளம் பெற்றனர்!

02 July26 DMK protest - 2026

தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு உயர்த்தபட்ட சம்பளம் கொடுக்கப்பட்டது. தாங்கள் கொடுத்த கடிதத்தை திமுக., எம்.எல்.ஏ.,க்கள் திரும்பப் பெற்றதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை தீரும் வரை, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க் களுக்கு, சம்பள உயர்வு வேண்டாம்’ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து  அவைத்தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தார்.

இதனால் அவைத்தலைவரிடம் கொடுத்த கடிதத்தை தி.மு.க., – எம்.எல். ஏ.,க்கள் திரும்பப் பெற்றால் மட்டுமே சம்பள உயர்வு என அரசு அறிவித்தது!

இந்நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கக் கோரி, சட்டசபை செயலரிடம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கடிதம் அளித்தார். இதையடுத்து அவர்களுக்கு, இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப் படுகிறது. அத்துடன் நிலுவைத் தொகையான ரூ. 6.50 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

இந்த வகையில், மு.கருணாநிதிக்கு வழங்கப் பட வேண்டியநிலுவைத் தொகையையும் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி எனில், சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னது மக்களை, போக்குவரத்துத் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்குத்தானா என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பொங்கித் தீர்த்துள்ளனர்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை சம்பள உயர்வு வேண்டாம் என்று சொன்னீர்களே…. அப்படி எனில், இப்போது எல்லா போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையும் தீர்வு கண்டு முடிவாகிவிட்டதா? எல்லாருக்கும் அவர்களின் பிஎஃப், ரிடையர்மெண்ட் பெனிஃபிட், நிலுவைத் தொகை எல்லாம் கிடைத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்!

எடப்பாடி பழனிச்சாமி அரசு தி.மு.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது  உண்மை தான்! அவர்களே போட்ட வழக்குகளை அவர்களே வாபஸ் பெறுகிறார்கள், கொடுத்த கடிதத்தை அவர்களே திரும்பப் பெறுகிறார்கள் என்று கலாய்க்கின்றனர் நெட்டிசன்ஸ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories