முதியவாிடம் திருமண ஆசை காட்டி நகை மோசடி; இளம்பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு….!

theruttu 2 - 2026

70 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 4 பவுன் நகை   மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் திருமண புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை அடுத்துள்ள மருக்காலாங்குளம் பகுதியை சேர்ந்தவா் தங்கப்பாண்டியன்(68) இவரது மனைவி அழகாத்தாள் தம்பதிக்கு அந்தோணிராஜ், முத்துபாண்டியன் என இரு மகன்கள்.இருந்துள்ளனா்.

அதில் அந்தோணிராஜ் என்பவர் திருமணம் ஆகாமலே இறந்துவிட்டார். இதேபோல் மற்றொரு மகனான முத்துபாண்டியன் ராணுவத்தில் பணியாற்றி விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மனைவிக்கு மத்திய அரசு பணி கிடைக்கப்பெற்றதால் தனது இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்தாண்டு அழகாத்தாள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இதனால் மருக்காலாங்குளத்தில் தங்கபாண்டியன் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தங்கபாண்டியனின் வீட்டிற்கு 30 வயது மதிக்கதக்க இளம்பெண்ணும் திருமண புரேக்கர் ஒருவரும் வந்துள்ளனர்.

இளம்பெண்ணுடன் வந்த புரோக்கர் அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி என்றும் அவள் தாய், தந்தை இல்லாத அனாதை என்றும், அவள் கீழசுரண்டையில் உள்ள தையல் கடையில் வேலைபார்த்து வருவதாக கூறியுள்ளார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

மேலும், இளம்பெண்ணை தாங்கள் திருமணம் செய்துகொண்டால் கடைசி காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று ஆசை வார்த்தை  கூறியுள்ளார்.

இதை நம்பிய தங்கபாண்டியன் ஜெயந்தியிடம்   தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என கேட்டுள்ளார் அதற்கு அந்த பெண் ஜெயந்தி சம்மதம் தெரிவித்துள்ளார் இருவரும் தனிமையில் பேசிட வைத்த திருமண புரோக்கர் வீட்டை நோட்டமிட்டுள்ளார்.

அப்போது மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கப்பாண்டியன் மனைவியின் 3 பவுன் நகைகளை திருடி தனது கைப்பையில் வைத்துகொண்டார்.

மேலும் உடனே கோயிலில் திருமணம் செய்வதற்கான தாலிச் சங்கிலி வாங்கவேண்டும் எனக்கூறினார். அதன்பேரில் சுரண்டையில் உள்ள நகைகடைக்கு ஒரே பைக்கில் 3 பேரும் சென்றனர்.

அப்போது அந்த இளம்பெண்ணுக்கு தாலி மற்றும் மூக்குத்தி என ஒரு பவுனுக்கு தங்க நகைகளை தங்கபாண்டியன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

பின்னர் அதே பைக்கில் மூவரும் கீழ சுரண்டைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வரும் வழியில் ஆடை மாற்றிவரும் வரை பஸ் நிறுத்தம் பகுதியில் காத்திருக்குமாறு  கூறிச்சென்றனர்.

இதனையடுத்து நீண்ட நேரமாக காத்திருந்த தங்கபாண்டியன் புரோக்கரும் இளம்பெண்ணும் திரும்பாததால் நகை பறிபோனது தெரிய  வந்தது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து  நகை அபகரித்து சென்ற இளம்பெண்ணையும், புரோக்கரையும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாகக் கூறி மர்மநபர் 5 பவுன் நகையை அபகரித்து சென்றார். அதன்சுவடு மறைவதற்குள் தற்போது நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories