தனியார் மருத்துவமனையின் அலட்சியம் ஆபரேசன் செய்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு….!

Published:

 

kovi 1 - 2026

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் அலட்சியம்: பெண்ணின் உடலுக்குள் வைத்துத் தைக்கப்பட்ட பஞ்சு;  மருத்துவா்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு…1

கோவை மாவட்டம் புளியகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர்கள் கவனக் குறைவாக பஞ்சுத் துண்டை வயிற்றில் வைத்துத் தைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் கணேசன் (37) என்பவர் அளித்த புகார் மனுவில், 2018ம் ஆண்டு தனது மனைவிக்கு புளியக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் செலவழித்து கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் அவரது மனைவி.

இதையடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் ஸ்கேன் செய்த மருத்துவர்கள், வயிற்றுக்குள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் பஞ்சு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போயினர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சை எடுத்தனர். தற்போது அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இது குறித்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று கேட்டபோது, அவர்கள் தன்னை மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி விரட்டியதாகவும் கணேசன் கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img