திருமலைக்கோயில் கும்பாபிஷேகம்; அடிவாரத்தில் இருந்து இலவச வேன்கள்!

thirumalaikoil bus free - 2026

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா களை கட்டி வருகிறது. நாளை ஜூன் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருமலைக்கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இலவசமாக பக்தர்களை அழைத்துச் செல்ல வேன்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. இதனை தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி தலைமையில் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆய்வு செய்தார்.

திருமலைக்கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்று ஏற்கெனவே போக்குவரத்துத் துறை தெரிவித்திருந்தது. தென்காசி, செங்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து டவுன் பஸ்கள் அதிகம் விடப் படுகின்றன.

thirumalaikoil - 2026இந்த பஸ்கள் அனைத்தும் திருமலைக்கோயில் மலை அடிவாரத்துடன் நின்றுவிடும். மேலும், ஏராளமான பக்தர்கள் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் வருவர் என்ற போதும், அவற்றை மலை மீது ஏற மலைச்சாலையில் அனுமதிப்பதில்லை. அனைத்து வாகனங்களும் கீழேயே நிறுத்தப் படும் என்றும், கும்பாபிஷேகம் முடிந்த பின்னரே வாகனங்களை மேலே அனுப்ப ஏற்பாடு செய்யப் படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அதே நேரம் பத்திரிகையாளர்களுக்கான அழைப்பிதழ்கள் கூட கோயில் நிர்வாகம் மூலம் எவருக்கும் அனுப்பப் படவில்லை. பத்திரிகையாளர்களுக்கான அனுமதிச் சீட்டும் வழங்கப் படவில்லை. எவருடைய வாகனங்களும் கும்பாபிஷேகம் முடியும் வரை மலைமீது ஏற அனுமதிக்கப் பட மாட்டாது என்று கோயில் நிர்வாகம் கூறிவிட்டதால், ஊடக செய்தியாளர்கள் கோயில் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories