February 23, 2026, 10:05 AM
26 C
Chennai

செங்கோட்டை அருகே 10 அடி ஆழ குழியில் விழுந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினா் மீட்டனா்…..!

YANIKUTTEY 3 - 2026
தமிழக–கேரள மாநில எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்து அச்சன்கோவில் கல்லாறு எனும் வனப்பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான தமிழக, கேரள கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இந்த கல்லாறு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக, ஆங்காங்கே 10 அடியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த வழியாக யானைக்கூட்டம் சென்றது. அப்போது 6 மாத குட்டி யானை ஒன்று எதிர்பாராதவிதமாக ரப்பர் தோட்டத்தில் உள்ள சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையால் அந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால், குட்டி யானை வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளது.

மேலும் குட்டியானையை காப்பற்ற மற்ற யானைகள் மீட்க முயன்றும் முடியவில்லை.

இதனால் அந்த யானைகள் பிளிறியவாறு இருந்தன. இது குறித்த தகவல் அறிந்த உடனே அங்கு சென்ற கேரள வனத்துறையினர் பட்டாசு வெடித்து, யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அதனைதொடா்ந்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பள்ளத்தில் குட்டி யானை சிக்கி தவிப்பதை அறிந்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் அந்த பள்ளத்தின் அருகில் சாய்வாக மற்றொரு பள்ளத்தை தோண்டினர்.

தொடர்ந்து குட்டி யானை சாய்வான பள்ளம் வழியாக வெளியே வந்தது.

உடனே அந்த குட்டி யானை சிறிது தூரம் ஓடிச் சென்று, வனப்பகுதியில் இருந்த யானைக்கூட்டத்துடன் சேர்ந்தது. தாய் யானை அந்த குட்டி யானையை அழைத்து சென்றது.

இது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories