கல்யாணம் முடிஞ்ச கையோட… உயிர் காக்கும் பிரசாரம்! புது தம்பதிக்கு குவியும் பாராட்டு!

salem couple helmate - 2026 புதுமண தம்பதிகள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … அவர்களுக்கு பாராட்டு குவிகிறது.

புதுமண தம்பதிகளின் இந்த நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது!

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து ஹெல்மெட்டினால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அரசு சார்பிலும் காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

அதன் ஒரு பகுதியாக சேலம் தாதகாப்பட்டி பகுதியில் கீர்த்திராஜ் தனசிரியா தம்பதிகளின் திருமணம் நடைபெற்றது இந்த புதுமண தம்பதிகள் இருவரும் ஹெல்மெட் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதுமண தம்பதிகள் இருவரும் மணக்கோலத்தில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டனர்

மேலும் இவர்கள் சாலையில் செல்கின்ற பொழுது எதிரே வருகின்ற வாகன ஓட்டிகள் இடமும் இவர்களுக்கு அருகில் வருகின்ற வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியும் படியும் ஹெல்மெட் அணிவதால் தங்களின் உயிர் பாதுகாக்கப்படும் என்று அவர்களிடம் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

salem couple - 2026மேலும் இந்த புதுமண தம்பதினர் மணகோலத்தில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது .

மணமக்கள் இது குறித்துக் கூறுகையில் மனிதன் உயிர் மிகவும் விலை மதிப்பற்றது ஆனால் அந்த மனித உயிரினை பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு சின்ன செயல் தான் இந்த ஹெல்மெட்!

salem couple helmate1 - 2026ஹெல்மெட் என்பது மிக மிக அவசியமானது ஆகவே எங்களுக்கு திருமணம் முடிந்த அடுத்த பணியாகவே ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாகவும் நாங்கள் மணக்கோலத்தில் செல்வதால் குறைந்தது நாங்கள் சொல்லும் கருத்தினை 100 நபர்கள் ஆவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் திருமணம் முடிந்த நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாங்கள் மேற்கொண்ட ஆகவே ஒவ்வொருவரும் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுமண தம்பதிகள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories