கோயில் கல்வெட்டு தகவல்கள் தமிழ், ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும்: நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

temple kalvettu - 2026

கோவில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை நேற்று உத்தரவு பிறப்பித்தது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

temple - 2026அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன! அவற்றில் கோயில்களில் சிறப்பு வரலாறு, அப்போதைய சூழ்நிலைகளில் நடைபெற்ற போர்கள், சமாதான உடன்படிக்கைகள் இவை குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளன.

இவற்றை மக்கள் அறியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வெட்டு தகவல்களை தொகுத்து அந்தந்த தலங்களில் வெளியிட்டால் தமிழர்களின் வரலாறு குறித்து அறிய பேருதவியாக அமையும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேலும் கல்வெட்டுகளில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும் வாய்ப்பாக அமையும்!

mannarkoil periyanambi - 2026
வேதபுரி மன்னார்கோவில் ஸ்ரீ பெரியநம்பி பராங்குச தாசர் திருமாளிகை – பெரியநம்பி நரசிம்ம கோபாலன்.

தமிழர்களின் வரலாறு பழமையானது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள நிலையில் கோயில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிட்டால் அதற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமையும் என்பதுடன் தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையும்

இதுகுறித்து தொல்லியல் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை! எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடவும் அவற்றை கோயில் வளாகங்களில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணா, புகழேந்தி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது! அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் அரசு உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்!

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories