கோயில் கல்வெட்டு தகவல்கள் தமிழ், ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும்: நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

temple kalvettu - 2026

கோவில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை பரிசீலித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை நேற்று உத்தரவு பிறப்பித்தது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

temple - 2026அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன! அவற்றில் கோயில்களில் சிறப்பு வரலாறு, அப்போதைய சூழ்நிலைகளில் நடைபெற்ற போர்கள், சமாதான உடன்படிக்கைகள் இவை குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளன.

இவற்றை மக்கள் அறியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கல்வெட்டு தகவல்களை தொகுத்து அந்தந்த தலங்களில் வெளியிட்டால் தமிழர்களின் வரலாறு குறித்து அறிய பேருதவியாக அமையும்.

மேலும் கல்வெட்டுகளில் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அவற்றை அறிந்து கொள்வதன் மூலம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும் வாய்ப்பாக அமையும்!

mannarkoil periyanambi - 2026
வேதபுரி மன்னார்கோவில் ஸ்ரீ பெரியநம்பி பராங்குச தாசர் திருமாளிகை – பெரியநம்பி நரசிம்ம கோபாலன்.

தமிழர்களின் வரலாறு பழமையானது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ள நிலையில் கோயில் கல்வெட்டு தகவல்களை தமிழ் ஆங்கில மொழிகளில் வெளியிட்டால் அதற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் அமையும் என்பதுடன் தமிழர்களின் பாரம்பரிய சிறப்புகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமையும்

இதுகுறித்து தொல்லியல் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை! எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடவும் அவற்றை கோயில் வளாகங்களில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணா, புகழேந்தி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது! அப்போது நீதிபதிகள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் அரசு உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories