திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல! ஸ்டாலின் இருந்த பதவியில் உதயநிதி!

udayanidhi e1524026832498 - 2026

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றி வரும் சாமிநாதனை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக திமுக சட்டதிட்ட விதி, 18, 19 பிரிவுகளின் படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.


திமுக.,வின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது இளைஞரணி செயலாளர் பதவி!  தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையான மு.கருணாநிதியால் அறிவிக்கப் பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர் அணிச் செயலர் பதவியில் இருந்து வந்தார். 60 வயது நெருங்கிய போதும் இளைஞர் அணியில் செயலராக இருந்துவந்த ஸ்டாலின், பின்னர் அந்தப் பதவியில் இருந்து விடுபட்டு, இப்போது திமுக., தலைவர் ஆக உள்ளார்.

dmk banner - 2026

இந்நிலையில், தற்போதைய திமுக., தலைவரும் முன்னாள் இளைஞர் அணிச் செயலருமான மு.க.ஸ்டாலின், தனது மகனை தற்போதைய இளைஞர் அணிச் செயலராக நியமித்துள்ளார். முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்! 41 வயதாகும் உதயநிதி தற்போது இளைஞர் அணிச் செயலராக தனது தந்தை இருந்த பதவியில் அமர்ந்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வாரிசு அரசியல் கோலோச்சும் குடும்பக் கட்சியாக திமுக., உள்ளது என்ற குற்றச்சாட்டு அதன் மீது முன்வைக்கப் படுகிறது. முன்னர் திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று அதன் தலைவராக இருந்த கருணாநிதி கூறியிருந்தார். அதனை தற்போது திமுக., அறிவாலயம் நிரூபித்திருக்கிறது என்கிறார்கள்.

சங்கரமடத்தில், ரத்த சொந்தம் இருக்கும் எவரும் அடுத்த மடாதிபதி ஆக வர முடியாது. சங்கரமடத்தில் மடாதிபதியாக இருக்கும் ஒருவரின் ரத்த சொந்தங்கள் எவரும் மடத்தின் பணிகளில் இருக்க முடியாது. அதே நேரம், மடத்தில் அடுத்த மடாதிபதியாக வர இருப்பவரை முன்னரே உள்ள மடாதிபதி தேர்ந்தெடுத்து, அவருக்கு மடாதிபதிக்கான பயிற்சியைக் கொடுத்து, தனக்குப் பின் பட்டம் சூட்ட தயார் செய்து வைப்பார். இதில், தன் சொந்தக்காரர் எவரையும் மடாதிபதியாகவோ, மடத்தின் முக்கியப் பொறுப்புகளிலோ ஒரு மடாதிபதி நியமனம் செய்ய இயலாது.

அதே நேரம், அறிவாலய மடத்துக்கு மடாதிபதியாக உள்ளவர், தன் வாரிசை அடுத்த மடாதிபதியாக, தான் இருந்த இடத்துக்கு தேர்வு செய்ய இயலும். அதைத்தான் சூசகமாக மு.கருணாநிதி, திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று அன்றே கோடிட்டுக் காட்டினார் என அவரது அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டுகிறார்கள்!

1 COMMENT

  1. அறிவாலய மடத்தை, சங்கர மடத்துக்கு நிகராக ஓப்பிடலாமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories