காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு கட்டாய ஹெல்மெட் குறித்து டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் டிஜிபி., டி.கே.ராஜேந்திரனும் இது போன்ற சுற்றறிக்கையை அனுபியிருந்தார். ஹெல்மெட் போடாமல் யாராவது போலீஸார் சிக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று மிரட்டவும் செய்திருந்தார்.