இது அச்சமூட்டும் காலமில்லை! அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கவேண்டாம்: கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

Kanchipuram athivarathar utsava - 2026அத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று பரனூர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

யாருக்கும் பயந்து சுவாமியை ஒளித்து வைக்கக் கூடிய காலம் இது இல்லை என்பதால் காஞ்சி அத்தி வரதரை பக்தர்கள் தினமும் சேவிக்கும் வகையில் வெளியிலேயே வைக்க வேண்டும் என்று பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!

காஞ்சி அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து வழிபடும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது! ஒரு காலத்தில் மன்னர் ஆட்சியின் போது மொஹலாய சுல்தான்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி கோவில் சிலைகளை பாதுகாப்பாக வைக்க பக்தர்கள் கடைபிடித்த வழி முறைகளில் இதுவும் ஒன்று என்று ஒரு சாரார் கூறுகின்றனர்!

குண்டத்தில் இருந்து எழுந்த அத்தி வரதரை குளிர்விப்பதற்காக குளத்தில் எழுந்தருளச் செய்வது வழக்கம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

srikrishnapremiswamigal - 2026இந்நிலையில் அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கத் தேவையில்லை என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது பல நூற்றாண்டுகளாக அத்திவரதர் காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளாக மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருந்தார். 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட படையெடுப்புக் காலத்தில் அத்திவரதரை அங்கிருக்கும் திருக்குளத்தில் ஒளித்து வைத்தனர்.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

இது காஞ்சிபுரம் கோவிலில் துவஜஸ்தம்பத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது! தற்போது அத்தி வரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்! 40 ஆண்டுகளாக தண்ணீருக்குள் இருந்த மூர்த்தி எந்தவித பழுதும் இல்லாமல் இருப்பதை தினமும் பல பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்து வருகின்றனர்!

பழைய வழக்கப்படி மூர்த்தியை தண்ணீருக்குள் தான் அமிழ்த்து வைப்போம் என்றால் தெய்வமாக பார்த்துக் கொண்டிருந்த இவ்வளவு மக்களின் மனதுக்கும் கஷ்டமாக இருக்கும்!

மறுபடியும் அவ்வாறு ஒளித்து வைக்க வேண்டிய அவசியமில்லை யாருடைய கலகத்திற்கும் பயந்து ஒளித்து வைக்க வேண்டிய தேவையில்லை. இப்போது அந்த காலமும் இல்லை என்பதால் கோவிலில் அனைவரும் தரிசிக்கக் கூடிய ஓர் இடத்தில் வைத்து விடலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! பக்தர்கள் பலர் இன்னமும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories