February 22, 2026, 11:56 AM
29.6 C
Chennai

இது அச்சமூட்டும் காலமில்லை! அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கவேண்டாம்: கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

Kanchipuram athivarathar utsava - 2026அத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று பரனூர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

யாருக்கும் பயந்து சுவாமியை ஒளித்து வைக்கக் கூடிய காலம் இது இல்லை என்பதால் காஞ்சி அத்தி வரதரை பக்தர்கள் தினமும் சேவிக்கும் வகையில் வெளியிலேயே வைக்க வேண்டும் என்று பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!

காஞ்சி அத்தி வரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து வழிபடும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது! ஒரு காலத்தில் மன்னர் ஆட்சியின் போது மொஹலாய சுல்தான்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி கோவில் சிலைகளை பாதுகாப்பாக வைக்க பக்தர்கள் கடைபிடித்த வழி முறைகளில் இதுவும் ஒன்று என்று ஒரு சாரார் கூறுகின்றனர்!

குண்டத்தில் இருந்து எழுந்த அத்தி வரதரை குளிர்விப்பதற்காக குளத்தில் எழுந்தருளச் செய்வது வழக்கம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

srikrishnapremiswamigal - 2026இந்நிலையில் அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கத் தேவையில்லை என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசிய போது பல நூற்றாண்டுகளாக அத்திவரதர் காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாளாக மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருந்தார். 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட படையெடுப்புக் காலத்தில் அத்திவரதரை அங்கிருக்கும் திருக்குளத்தில் ஒளித்து வைத்தனர்.

இது காஞ்சிபுரம் கோவிலில் துவஜஸ்தம்பத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது! தற்போது அத்தி வரதரை லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்! 40 ஆண்டுகளாக தண்ணீருக்குள் இருந்த மூர்த்தி எந்தவித பழுதும் இல்லாமல் இருப்பதை தினமும் பல பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்து வருகின்றனர்!

பழைய வழக்கப்படி மூர்த்தியை தண்ணீருக்குள் தான் அமிழ்த்து வைப்போம் என்றால் தெய்வமாக பார்த்துக் கொண்டிருந்த இவ்வளவு மக்களின் மனதுக்கும் கஷ்டமாக இருக்கும்!

மறுபடியும் அவ்வாறு ஒளித்து வைக்க வேண்டிய அவசியமில்லை யாருடைய கலகத்திற்கும் பயந்து ஒளித்து வைக்க வேண்டிய தேவையில்லை. இப்போது அந்த காலமும் இல்லை என்பதால் கோவிலில் அனைவரும் தரிசிக்கக் கூடிய ஓர் இடத்தில் வைத்து விடலாம்.

இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! பக்தர்கள் பலர் இன்னமும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories