December 5, 2025, 11:46 PM
26.6 C
Chennai

சீறிய சிறுத்தையால் சிதறுண்ட பசு ! நீலகிரியில் நடந்த பரிதாபம்!

chitta - 2025நீலகீரி மாவட்டம் நெலாக்கோட்டை அருகே பசு மாட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை அருகே உள்ள மேல்ராக்வுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மணிகண்டனுக்கு சொந்தமான பசு மாடுகள் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றன. பின்னர் மாலையில் அவை வீடு திரும்பின. ஆனால் 4 வயது பசு மாடு மட்டும் வீட்டுக்கு வர வில்லை. இதனால் மணிகண்டன் அந்த பசு மாட்டை தேடிச் சென்றார்.

அப்போது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர்கள் ராமகிருஷ்ணன், நந்தகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் நந்தினி வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.cow crop e1564038167492 - 2025அப்போது சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட மணிகண்டன் இழப்பீடு தொகை வழங்குமாறு வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சிறுத்தைப்புலி கால்நடைகளை மட்டுமின்றி வளர்ப்பு பிராணிகளான கோழி, நாய்களையும் கடித்து கொன்று வருகிறது. பொதுமக்களும் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

எனவே கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் சுமேஸ் சோமன் உத்தரவுப்படி 3 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அப்பகுதியில் பொருத்தி வைத்து சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories