சீறிய சிறுத்தையால் சிதறுண்ட பசு ! நீலகிரியில் நடந்த பரிதாபம்!

chitta - 2026நீலகீரி மாவட்டம் நெலாக்கோட்டை அருகே பசு மாட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை அருகே உள்ள மேல்ராக்வுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மணிகண்டனுக்கு சொந்தமான பசு மாடுகள் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றன. பின்னர் மாலையில் அவை வீடு திரும்பின. ஆனால் 4 வயது பசு மாடு மட்டும் வீட்டுக்கு வர வில்லை. இதனால் மணிகண்டன் அந்த பசு மாட்டை தேடிச் சென்றார்.

அப்போது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர்கள் ராமகிருஷ்ணன், நந்தகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் நந்தினி வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.cow crop e1564038167492 - 2026அப்போது சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட மணிகண்டன் இழப்பீடு தொகை வழங்குமாறு வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சிறுத்தைப்புலி கால்நடைகளை மட்டுமின்றி வளர்ப்பு பிராணிகளான கோழி, நாய்களையும் கடித்து கொன்று வருகிறது. பொதுமக்களும் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

எனவே கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் சுமேஸ் சோமன் உத்தரவுப்படி 3 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அப்பகுதியில் பொருத்தி வைத்து சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories