அரிவாளைக் கண்டும் பயம் இல்லை… கொள்ளையரை அடித்து விரட்டிய மூதாட்டி!

nellai robbery - 2026

கொள்ளை அடிக்க வந்த இருவரின் கைகளில் இருந்த அரிவாள், கத்தியைக் கண்டும் எந்த வித அச்சமும் இல்லாமல், கொள்ளையர்களை முதிய தம்பதியர் தாக்கி ஓட ஓட விரட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 78) அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸ் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 4 ஏக்கரில் எலுமிச்சை தோட்டம் அமைத்துள்ளார். தோட்ட வளாகத்தில் வீடு கட்டி மனைவி செந்தாமரை (வயது 70) உடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சண்முகவேல் வீட்டு முற்றத்தில் சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, சண்முகவேலின் பின்னால் வந்த ஒரு கொள்ளையன், மெதுவாக வந்து, அவர் அறியாத வண்ணம் பின்புறத்தில் இருந்து கொண்டு ஒரு துண்டால் சண்முகவேலின் கழுத்தில் சுற்றி, அவரைக் கொலை செய்ய முயற்சி செய்தான்.

ஆனால் அந்தக் கொள்ளையனை மீறி, திமிறி திமிறி அவர் அவன் பிடியில் இருந்து விடுபட்டார். அதே நேரம் அவரது சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்து அவர் மனைவி செந்தாமரை ஓடிவந்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

அப்போது முகமூடி அணிந்த இன்னொரு கொள்ளையன் ஓடிவந்து, அவரைத் தாக்க முயன்றான். ஆனால் செந்தாமரை, பலம் கொண்ட மட்டும் வீட்டில் அருகில் இருந்த பொருள்களை எடுத்து அவர்கள் மீது எறிந்துள்ளார்.

இருவரும் முகமூடி அணி்ந்திருந்து, கைகளில் அரிவாள் கத்தி என வைத்திருந்தனர். ஆனால் அந்த அரிவாளைக் கண்டு அவர் அச்சம் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கினர். இதனால் ஒரு கட்டத்தில் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆயினும், ஒருவன் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 35 கிராம் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினான். செந்தாமரையின் கையிலும் லேசாக அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பியோடினர்.

போலீஸாரின் விசாரணையில் கொள்ளையர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories