சென்னை:
நமது தேசியக் கொடியை எரித்து ஆணவமுடன் அதனை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்ட கயவனை தேச துரோக சட்டத்தில் கைது செய்யக் கோரி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 30.01.2016 சனிக்கிழமை அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது. அதே புகாரினை எழுத்து பூர்வமாக சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரை இன்று (01.02.2016) திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.




