ஏரிகளில் நீர் இல்லை; நிலத்தடி நீர் குறைவு; தமிழகம் முழுதும் குடிநீர் பற்றாக்குறை… அரசு நடவடிக்கை என்ன?: ஸ்டாலின்

stalin walkout - 2026

தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, ஏரிகளில் தண்ணீர் இல்லை – 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது; குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், “தமிழகத்தில் குடிநீா்ப் பஞ்சம் மிகக் கடுமையாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சென்னை குடிநீா் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, ரெட்ஹில்ஸ் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி என அனைத்து ஏரிகளின் நீா் மட்டமும் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

கடந்த 12ஆம் தேதி நிலவரப்படி 885 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருப்பு உள்ளது. இதே காலக்கட்டத்தில் 4 ஆயிரத்து 976 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் குறைந்தது 20 மாவட்டங்களில் நிலத்தடி நீா் மிகவும் மோசமாகக் குறைந்துவிட்டதாக ஆய்வறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக சென்னை மாநகர மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மழை அளவு 55 சதவிகிதம் குறைந்துவிட்டதால், குடிநீருக்கு அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற பழமொழி தான் நினவுக்கு வருகிறது. 2016-17, 2017-18 மற்றும் 2018-19 நிதிநிலை அறிக்கைகளில் மட்டும் ஏறக்குறைய 15 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீா் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. ஏற்கெனவே இந்த ஆட்சியிஜ்ன் 110ன் கீழான அறிவிப்புகள், எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா அறிவிப்புகளில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஐந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த திட்டங்களின் மதிப்பு மட்டும் 9 ஆயிரத்து 692 கோடி ரூபாய். உங்களுடைய ஆட்சியில் மொத்தமாக அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீா் திட்டங்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே அரசு இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை இந்த மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதனால் மக்கள் சந்திக்கும் அவலங்களை மனதில் வைத்து வருகிற கோடைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படப்போகும் அவதியைப் புரிந்துகொண்டு ஏற்கெனவே அறிவித்த இக்குடிநீா் திட்டங்களை எல்லாம் உடனடியாகச் செயல்படுத்தும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனப் பேசினார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories