ஏரிகளில் நீர் இல்லை; நிலத்தடி நீர் குறைவு; தமிழகம் முழுதும் குடிநீர் பற்றாக்குறை… அரசு நடவடிக்கை என்ன?: ஸ்டாலின்

stalin walkout - 2026

தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது, ஏரிகளில் தண்ணீர் இல்லை – 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைந்து விட்டதாக ஆய்வறிக்கை கூறுகிறது; குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், “தமிழகத்தில் குடிநீா்ப் பஞ்சம் மிகக் கடுமையாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சென்னை குடிநீா் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, ரெட்ஹில்ஸ் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி என அனைத்து ஏரிகளின் நீா் மட்டமும் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

கடந்த 12ஆம் தேதி நிலவரப்படி 885 மில்லியன் கன அடி நீா் மட்டுமே இருப்பு உள்ளது. இதே காலக்கட்டத்தில் 4 ஆயிரத்து 976 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் குறைந்தது 20 மாவட்டங்களில் நிலத்தடி நீா் மிகவும் மோசமாகக் குறைந்துவிட்டதாக ஆய்வறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக சென்னை மாநகர மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மழை அளவு 55 சதவிகிதம் குறைந்துவிட்டதால், குடிநீருக்கு அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக ரூ.157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற பழமொழி தான் நினவுக்கு வருகிறது. 2016-17, 2017-18 மற்றும் 2018-19 நிதிநிலை அறிக்கைகளில் மட்டும் ஏறக்குறைய 15 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீா் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. ஏற்கெனவே இந்த ஆட்சியிஜ்ன் 110ன் கீழான அறிவிப்புகள், எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா அறிவிப்புகளில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஐந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த திட்டங்களின் மதிப்பு மட்டும் 9 ஆயிரத்து 692 கோடி ரூபாய். உங்களுடைய ஆட்சியில் மொத்தமாக அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீா் திட்டங்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே அரசு இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை இந்த மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதனால் மக்கள் சந்திக்கும் அவலங்களை மனதில் வைத்து வருகிற கோடைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படப்போகும் அவதியைப் புரிந்துகொண்டு ஏற்கெனவே அறிவித்த இக்குடிநீா் திட்டங்களை எல்லாம் உடனடியாகச் செயல்படுத்தும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனப் பேசினார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories