December 6, 2025, 12:05 AM
26 C
Chennai

ஹெல்மெட்டுக்குள் மொபைலை செருகி பேசிச் சென்றால்.. உஷார்! வெடித்த போனால் துடித்தவர் நிலை..?

celphone while drive - 2025
File Picture; for representation

வண்டியை ஓட்டிச் செல்லும் போது செல்போனில் பேசாதீர்கள் என்று அரசு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்கிறது. வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் அபராதம் என்று போலீஸாரும் கண்காணிப்பதால், சிலர் வெளியே தெரியும் வகையில் பேசிச் செல்வதில்லை. ஆனால், ஹெல்மெட் கட்டாயம் என்று ஆக்கப்பட்ட நிலையில், ஹெல்மெட்டுக்குள் மறைத்து வைத்து, செல்போனை பேசிச் செல்கின்றனர்.

இத்தகையவர்களுக்கு அதிர்ச்சியும் எச்சரிக்கையும் தரும் வகையில் ஒரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

சாதாரணமாகவே செல்போனில் உள்ள பேட்டரி சூடாகி, அதன் மூலம் செல்போன் சூடாகி திடீரென பேட்டரி வெடித்து விடும் சம்பவங்கள் சில நடந்துள்ளன. இந்நிலையில், செல்போனை காதுக்கும் ஹெல்மெட்டுக்கும் இருக்கும் இடைப்பகுதியில் செருகி பேசிச் செல்பவர்கள், செல்போனில் ஏற்படும் உராய்வு, அதிர்வு ஆகியவற்றால் அது பாதிக்கப் படும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி அருகே ஹெல்மெட்டுக்குள் வைத்தபடி செல்போனில் ஒருவர் பேசிச் சென்றபோது அது வெடித்துச் சிதறியது. இதில், காயமடைந்த நபர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி புளியரசி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கட்டடத் தொழிலாளரான இவர், பைக்கில் வரும்போது போன்கால் வந்துள்ளது. உடனே அவர், பைக் ஓட்டியபடியே ஹெல்மெட்டுக்குள் செல்போனை செருகிக் கொண்டு, மறுமுனையில் இருப்பவருடன் பேசியபடியே சென்றுள்ளார்.

கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில், சூளகிரி அருகே வந்த போது இவரது அலைபேசி பெருத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் தலை மற்றும் காது பகுதிகளில் காயத்துடன் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories