January 25, 2025, 7:54 AM
23.2 C
Chennai

ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய திருவிழா கோலாகலம்!

#image_title

சோழவந்தான்: மதுரை, திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன் சமேத, ஏடகநாதர் சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி
அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும்.

7-ம் நூற்றாண்டில் சங்கம் தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சமணர்கள் வசம் அப்போது, மதுரை ஆண்ட கூன்பாண்டியனும் நின்றசீர் நெடுமார பாண்டியனும் சிக்கி அந்த சமயத்தினை பின்பற்ற சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்குவதர்க்கும் தமிழ்நெறி வளரவும் பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை, மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றியும்
வெப்பு நோயை தீர்த்து வைத்தும் சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டு அது வைகை ஆற்றினை எதிர்த்து வந்து வெற்றி பெற்ற இடமான திருஏடகத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்று இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

ALSO READ:  பசும்பாலுக்கு பணம் உயர்த்திக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்த திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் இருந்து
விநாகர் முன்வர திருஞானசம்பந்தருடன் நின்றசீர் நெடுமார பாண்டியனின் தலைமை அமைச்சரான குலச்சிரை நாயனாருடன் வந்து ஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடினை எடுத்து செல்லும் வைபவமானது கேடயத்தில் விநாயகர் குதிரை வாகனத்தில் ஏடகநாதர் மற்றும் கேடயத்தில் திரு
ஞானசம்பந்தர் இவருடன் வைகை ஆற்று வாழ்க அந்தணர் என்ற வாசகம் குறித்த கரையில் உள்ள திருஞானசம்பந்தர் செப்பு தகட்டில் உள்ள ஏடு சன்னதியிலிருந்து, வாழ்க அந்தணர் என்ற செப்பு தகட்டில் ஆன ஏடு அலங்காரமாகி வைகையாற்றின் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.

இங்கு ஓதுவார் ஸ்தலத்திலேயே ,ஏடு எதிரேறிய வரலாறும் பக்தி பாடலுடன் எடுத்துக் கூறினர். நேற்று மாலை கன மழை பெய்த நிலையில் கனமழையிலும் பக்தர்கள் கூட்டத்தில் வைகை ஆற்றில் தண்ணீரில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது.

பின்னர், பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினார்கள். கோவில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், கோவில்
பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர்,
சிவனடியார் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  சபரிமலை நடை அடைப்பு; மீண்டும் நவ. 15ல் மண்டல பூஜைக்காக திறப்பு!

கொட்டும் மழையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு  செய்திருந்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!