December 17, 2025, 2:11 PM
28.3 C
Chennai

தமிழகம் முழுதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை:
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை இன்று வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி,

“சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்து மண்டலம் வாரியாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. கோவையைத் தொடர்ந்து, இப்போது மதுரையில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, சென்னை, திருச்சியில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பத்தில் (படிவம்-6) செல்லிடப்பேசி எண் கொடுத்தவர்களுக்கு, பட்டியலில் சேர்க்கப்பட்டதன் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். மேலும், இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம். கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் பட்டியலில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட அடுத்த இரு நாள்களில், புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை அச்சிடும் பணி நிறைவுபெறும். அதன் பிறகு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு 10 நாள்களுக்குள் வழங்கப்படும். புதிய வாக்காளர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வது எளிதாக இருக்கும்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் 8 ஆயிரம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. பிகாரில் இருந்து 50 ஆயிரம் இயந்திரங்களும், குஜராத்திலிருந்து 15 ஆயிரம் இயந்திரங்களும், மகாராஷ்டிரத்திலிருந்து 10 ஆயிரம் இயந்திரங்களும் கொண்டு வரப்படுகின்றன. இந்த இயந்திரங்களை வாக்குப் பதிவுக்காகத் தயார் செய்யும் பணி, பிப்ரவரி 1 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறும்…  என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சங்கோவில் ஆராட்டு உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சாஸ்தா கோயில் பக்தர்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று குசேலர் தினம்! குருவாயூரப்பன் கோயிலில் கொண்டாட்டம்!

இன்று குசேலர் தின சிறப்பு வழிபாடு சிறப்பு நிவேதிய பிரசாதமும் செய்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

Topics

அச்சங்கோவில் ஆராட்டு உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சாஸ்தா கோயில் பக்தர்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று குசேலர் தினம்! குருவாயூரப்பன் கோயிலில் கொண்டாட்டம்!

இன்று குசேலர் தின சிறப்பு வழிபாடு சிறப்பு நிவேதிய பிரசாதமும் செய்து படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

பஞ்சாங்கம் – டிச.17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தமிழகத்தை ஆபத்தில் தள்ளும் திமுக., அரசு; இந்து முன்னணி கண்டனம்

தமிழக முதல்வர் அவசரம் அவசரமாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள நங்கநல்லூர் பகுதியில் ஹஜ் விடுதிக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து… டிச.23ல் ஐயப்பனுக்கு தங்க அங்கி!

அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.

பயங்கரவாதம்: முதிர்ச்சியான விவாதம் தேவை!

பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, 'நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்பதற்கும் 'நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா' என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது.

ஆரியங்காவு ஐயன் கோயிலில் இன்று திருவாபரண வரவேற்பு; திருக்கல்யாண உத்ஸவம் தொடக்கம்!

வரும் 25ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியும் 26 ஆம் தேதி திருக்கல்யாண விழாவும் 27 ஆம் தேதி மண்டல பூஜை வழிபாடு நடைபெறும்.

பஞ்சாங்கம் டிச.16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories