திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி: சரத்குமார்

Published:

மதுரை:`
திராவிட கட்சிகளை தோற்கடிக்கவே பா. ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக சரத்குமார் பேட்டி அளித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவரிடம் 12 சதவீத வாக்கு வங்கி சமத்துவ மக்கள் கட்சிக்கு உள்ளது என்று நீங்கள் கூறுவது பொய் என எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த சரத்குமார் அவருக்கு நான் பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்றார். மேலும் திராவிட கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகக்தான் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம். தே.மு.தி.க.வுடன் பாரதீய ஜனதா பேசுவதை வரவேற்கிறேன். பா.ம.க. இந்த கூட்டணிக்கு வந்தாலும் சந்தோஷம் தான் என்றும் அவர் கூறினார்.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததைவிட அக்கட்சியில் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வீர்களா? என நிருபர்கள் கேட்டபோது பதில் அளிக்காமல் கோபத்துடன் சரத்குமார் காரில் ஏறி கோவில்பட்டி சென்றார்.

 

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img