அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் நலம் பெற வேண்டி பால்குடம்,தீச்சட்டி ,மண்சோறு,மற்றும் விளக்கு பூஜை ஆகிவற்றை செய்துவருகின்றனர் இந்நிலையில் திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும் அதிமுக ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறியாளர் கலைவாணி ஆகியோர் தலைமையில் 250 அதிமுகவினர்கள் நெல்லை புறநகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இது நெல்லை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது
Popular Categories



