சங்கரன்கோவில் ஆடி தபசு; ஜூலை 27 அன்று விடுமுறை

Published:

sankarankovil adithapasu - 2026

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே நடைபெறும் ஆடித்தபசு விழாவைக் காண, திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, சுற்றிலும் உள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் பெருமளவில் வந்து கோமதி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், ஆடித் தபசு விழாவை முன்னிட்டு ஜூலை 27ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img