பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் காவல் துறையினரால் குறிப்பிடப்படும் இடங்களில் மட்டுமே அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் தேர்தல் விதிமுறைகளின் படி இரவு 10 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சியின் தலைவர் வருகை குறித்து காவல் நிலையத்தில் தெரியபடுத்த வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். டிஜிட்டல் பேனர்களை வைக்க கண்டிப்பாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படும்.உள்ளிட்ட பல தேர்தல் விதிமுறைகளை உதவி ஆய்வாளர் எடுத்து கூறினார்.
இதில் அனைத்து கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்
பாவூர்சத்திரத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
Popular Categories


