December 6, 2025, 10:09 AM
26.8 C
Chennai

ஜெயமோஹன் தாக்கப்பட்ட விவகாரம்… உண்மை என்ன?!

jayamohan - 2025

ஜெயமோகன் தரப்பு வாதம் மட்டுமே வெளியே வந்திருக்கிறது. தரமற்ற பொருளைத் திருப்பித் தந்ததற்கு பெண் முதலாளியால் வசைபாடப்படிருக்கிறார்; ஆண் முதலாளியால் அடிக்கப்பட்டிருக்கிறார். உதைக்கப்பட்டிருக்கிறார்.

இவ்வளவு நடந்த பிறகும் அமைதியாக வீடு திரும்பிய ஜெயமோகனை ஆண் முதலாளி வீடு தேடி வந்து வசைபாடியிருக்கிறார். குடும்பத்தினரை அவமதித்திருக்கிறார். மிரட்டியிருக்கிறார்.

ஜெயமோகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது கடை முதலாளிக்கு ஆதரவாக கட்சிப் பிரமுகர்கள், பெரிய தலைகள் பேசியிருக்கிறார்கள். கடை உரிமையாளர் குடிகாரர்; சம்பவத்தின் போது குடித்துமிருந்திருக்கிறார். என ஜெயமோகன் தரப்பு வாதங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.

ஜெயமோகன் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதையும் தாண்டி வேறு சிலவும் நடந்திருக்கும். அவை என்னவாக இருந்தாலும் ஜெயமோகன் அடிக்கப்பட்டது நிச்சயம் கண்டிக்கத் தக்கதுதான்.
*
இந்த சம்பவம் தொடர்பாக முக நூலில் பல்வேறு கேலிகள், கிண்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. செய்திகளை உருவாக்கும் வட்டத்தில் இருப்பவனென்று ஜெயமோகன் சொல்லி ஓரிரு நாட்கள் கூட ஆகவில்லை.

உடனேயே செய்திகளின் மையத்துக்கு வந்துவிட்டிருக்கிறார். பொதுவாக சொல்லடி படும்வகையில்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கும். எனவே, இது அவரை மீறி செய்திச் சுழலுக்குள் சிக்கிய நிகழ்வாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

சமூக வலைதளங்களில் இந்நிகழ்வு தொடர்பான கேலிகளைக் கண்டு பலர் வருத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது.

இதே தமிழகத்தில் இந்துத்துவச் செயல்பாட்டாளர்கள் ஓடஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையும் பொது சமூகமும் அந்தக் கொலைகளைக் கள்ளக் காதலுடனும், பணத்தகராறுடனும் இணைத்துப் பேசியிருக்கிறது. அஞ்சலிக் கூட்டம் நடத்தியவர்களை அவதூறு பேசியிருக்கிறது.

சுவாதி போன்ற எளிய தனி நபர் கொடூரமாகப் பொது இடத்தில் கொல்லப்பட்டபோதும் அவரைப் பற்றிய அவதூறுகள் சகஜமாக முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு ஜாதிப் படுகொலையின் போதும் இப்படி நடக்கத்தான் செய்கின்றன.

உயிரைக் கொடுத்து நாட்டைக் காக்கும் ராணுவத்தினர் அவமானப்படுத்தப்படும் அளவுக்கு வேறு யாரும் அவமானப்படுத்தப்படுவதில்லை.

கோவிலுக்கு செல்லும் பெண்கள் வேசைகள் என்று சொல்ல எழுத்தாளருக்கு கருத்துச் சுதந்தரமும் கலைச் சுதந்தரமும் உண்டு என்று சொல்லும் எழுத்தாளர்கள் தம்மைப் பற்றிச் சொல்லப்படும் கிண்டல்களையும் புண்படாமல் எடுத்துக்கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும்.

ஏனென்றால் இந்த சமூகத்தில் பலர் இதைவிடக் கொடூரமான, சோகமான நிகழ்வுகளின் போதும் இதைவிடக் கேவலமாக எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள். அனைத்து எழுத்தாளர்களுமே அப்படியான நிகழ்வுகளின் போது தத்தமது அரசியல் சார்ந்தே எதிர்வினை புரிந்திருக்கிறார்கள்.

ஒரு கலைஞர் கலைஞராக மட்டுமே செயல்பட்டிருந்தால்தான் அப்படியான கண்ணியமான எதிர்வினைகளை எதிர்ப்பார்க்கமுடியும். அரசியல்வாதிபோல் நடந்துகொண்டிருந்தால் அவ்வண்ணமே எதிர்வினைகள் நடக்கும்.

மாற வேண்டியது சமூகம் மட்டுமல்ல.

  • பி.ஆர். மகாதேவன் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories