கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்த ஓபிஎஸ் சட்டரீதியாக வெற்றி பெறுவாரா?

கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றே நினைத்த அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்களிலும் அவரை புறக்கணித்தனர். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக அணி திரண்டு செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டு அதனை நடத்துவதற்கு தீவிரமாக செயல்பட்டனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை கேட்டு கோர்ட்டு படியேறினர். எப்படியாவது சட்டத்தின் மூலமாக தடை வாங்கி விட வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக செயலாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியினர் ஆதரவு இல்லாத நிலையில் தவித்து வந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் பின்னடைவாகவே அமைந்துள்ளது. கடந்த 2 வாரத்துக்கு முன்னர் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் முதல் முதலாக ஒற்றை தலைமை கோஷம் ஒலித்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியை பிடிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆவேசம் பொங்க பல்வேறு கருத்துக்களை கூறினார்.

இரட்டை தலைமை தற்போது நன்றாகவே சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒற்றை தலைமைக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதன் பின்னர் அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சோதனை மேல் சோதனையாக அமைந்திருந்தன. குறிப்பாக கடந்த ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் தனக்கு எதிராக இவ்வளவு களேபரம் நடந்தேறும் என்று ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவருக்கு எதிர்ப்பலைகள் எழுந்தன.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ஓரம் கட்டிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்களிலும் அவரை புறக்கணித்தனர். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பேனர்கள் கிழித்தும் எறியப்பட்டன. இப்படி கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்றே நினைத்திருந்தார். ஆனால் கடைசியில் அதுவும் பலிக்காமலேயே போய் விட்டது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை 100 சதவீதம் ஓங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக ஓபிஎஸ் வழக்கறிஞர் கூறினார். கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் செய்தார். சென்னை அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருக்கிறது, அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கேட்கிறீர்கள்? என்றார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், பொதுக்குழுவுக்கு தடை கேட்கப்பட்டிருக்கிறது, என்றார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அப்போது, 11ம் தேதி கூட்டத்தைக் கூட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்வதாகவும், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் விளக்கியிருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதன் கிழமை பிறப்பித்த உத்தரவின் நகல்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்துள்ளார்.இன்று மாலை என்ன நடக்கும் அரசியலாளர்கள் காத்திருக்கின்றனர்.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!
images 19 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories